புரிதல்

புரிதல்..................
🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️
அடுத்தடுத்த மறுகு வாழும் அறிவழகி எழிழரசும்
அடுத்த வாரம் முடிக்கவிருந்த முதுகலை பட்டத்தேர்வு
வலம்புரியும் இடம்புரியும் வாய்மூடிச் சேரும் அந்த
பணிலங்கள் போல் இருவருக்கும் பாசப்போரை என்ன சொல்ல
ஆனம் மட்டும் இருவருக்குள் அலையலையாய் பரிமாற
பானம் ஒன்றும் தேவையில்லை தாகம் ஏதும் தோன்றவில்லை
வேறாரும் பார்க்காமல் ஆராமம் சந்திப்பு
ஊராரே மெச்சும்படி உயர்ந்து வாழ அச்சாரம்
புஞ்சை மண் பெற்றெடுத்த புழுதிக்காடே ஆனாலும்
ஞஞ்சைக்கொன்றும் குறைவில்லை ஒருவர்மேல் ஒருவர்க்கு
பனி விலகா அதிகாலை பலிச்சொல்லும் விழுந்துவிட
துனி நிறைந்த வேதனையில் துடித்து அவள் ஓடிவிட
ஆஞ்சி ஒன்று அவன் மனதை அரிக்கும் செல்லாய் நுழைந்து விட
ஆய் முழுதும் அழிந்தன்று பாய் உறக்கம் மறந்து விட
அவன் மனதும் துயர்நேரும் பகல்கனவு கண்டுவிட
அறிவழகி எழுவையோ அப்படி ஓர் ஓலமிட்டு
தற்கொலை சம்பவத்தை நா தழுதழுக்க சொல்லி விட
அவள் வீடு நோக்கி புயல் காத்தாய்
அவன் உயிர் மறந்தே உடல் ஓட
சுற்றம் போட்ட ஓதையாலே சொற்ப உயிர் கைபிடித்து
முற்றத்திலே கிடக்கும் அந்த முழுநிலவை அவன்பார்க்க
கடும்பு எல்லாம் ஒன்று கூடி கரித்துக் கொட்ட இவன்பெயரை
முடங்கிப் போகும் இவன் வாழ்வில் முன்னின்ற பெரும்சாவு
வட்டிகையாய் வரைந்து வைத்த வாழ்க்கை கோலம் அன்றுமுதல்
பெட்டிக்குள்ளே அடைக்கப்பட்ட பெரும் பாம்பாய் முடங்கியதே...
🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️

எழுதியவர் : க.செல்வராசு (8-Feb-21, 9:41 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : purithal
பார்வை : 154

மேலே