தண்ணீர் குழாய்
வெகு நேரம் நீண்ட வரிசையில்,
காலி குடத்துடன் காத்திருந்தும்,
ஒரு சில மணி நேரத்தில்,
நின்று விடும், குழாய் தண்ணீர்,
இவ்விடையில் ஓர் முறையினும்,
ஜன்னலோரத்திலும், திண்ணையலமர்ந்தும்,
நெடுவாசலில் இருந்து வெளிவரும்
காளைகளை உற்று நோக்கும்,
காளையர்களை போல், என் விழிகள்
மட்டும் அங்கும், இங்கும், எங்கும்,
அடுத்து நீ தான் என்று
அங்கு ஓழித்த ஓசை மட்டும்,
என் காதினில், அவ்வோசை தவிர,
அவள் வரவை எண்ணி ,
என் முகம் மலர்ந்த போது,
என் வரிசையை விட்டுவிட்டு,
தண்ணீரும் நின்று விட,
தரிசனமும் நின்று விட,
காலி குடத்துடன் வீடு வந்து
அம்மாவின் குடமுழக்கை பெற்றேன்..........
குடமுழக்கு இன்னும் .........
வெள்ளூர் வை க சாமி