முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் - வெள்ளொத்தாழிசை பா

வெள்ளொத்தாழிசை பா -
சிந்தடி வெண்பாக்கள் மூன்றடுக்கி வருதல் வேண்டும்

தமிழால் சிறந்துயர் வள்ளுவ னுக்கென்று
தம்மால் எழுப்பியே ஆக்கினார் கோட்டம்
தமிழ்புக ழுக்கெனத் தாய்.

அனுபவம் பெற்றே அடிப்படை பக்தனாய்
அன்பினால் தொண்டாற்றி தோழனாய் சேர்ந்த
அனைவரின் நண்பரென் றும்..

தெளிந்த அடர்மதி சீர்மிகு திட்டமும்
தெள்ளு செயல்களை தீட்டிடும் ஸ்டாலின்
வளர்ச்சி முதல்வராயு ணர்
-----நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (24-May-21, 8:44 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 41

மேலே