புன்னகை முத்தின் பிரதிபலிப்பு

புல் நுனியில்
ஒரு வெண்பனித்துளி
அது ஒரு வெண்பா என்றான்
யாப்புக் கவிஞன்
அது ஒரு ஹைக்கூ என்றான்
ஜப்பானிய கவிஞன்
அது பனி புல்லில் எழுதிய ஓவியம்
என்றான் தூரிகைக்காரன்
நன்றாகத்தான் இருக்கிறது எல்லாம் ஆனால்
அவள் மெல்லிதழ் சிறிது திறக்கும்போது
இதழோரத்தில் பளிச்சிடும் புன்னகை முத்தின்
பிரதிபலிப்பு என்பேன் நான் !

எழுதியவர் : கல்பனா பாரதி (9-Jun-21, 10:35 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 51

மேலே