பள்ளி

பள்ளி......!

பள்ளி
என்ற பக்கத்தில்
பதிவுசெய்த குறிப்புகள் ..!

இமைப்பொழுதில்
இடமாரும்
ஆசிரியர்கள் ..!

அந்த நொடிப்பொழுதில் ,

முகம்மலர்ந்து
சோர்வு நீங்கும் ..!

மேசையில்
உடல்சாய்த்து
உறங்கத்தோன்றும் ..!

அசைவின்றி
கண்கள் நிற்கும் ..!

வானத்தில் மனம்
ரெக்கைகட்டி பறக்கும் ..!

கரும்பலகை
எனக்கென காத்துக்கிடக்கும் ..!

ஒடிவரும்
ஒருசிலர் பார்த்து ,
ஓய்வெடுத்த அசதி
என்னை
ஆயத்தப்படுத்தம் ..!

இடமாறியவர்
யாரெனப் பார்த்து
வசதி கொஞ்சம்
வாய்ப்பெடுத்துக்கொள்ளும் ..1

எழுதியவர் : இரா.ரமேஷ் (12-Jun-21, 7:00 pm)
சேர்த்தது : இரா ரமேஷ்
பார்வை : 44

மேலே