அப்பா எனும் காவியம்

அன்று நீங்கள் பட்ட துன்பங்களை
இன்று நான் படும் போது உள்ளத்தால் உணர்வதே அப்பா!

மனம்பொங்கும் பாசத்தை
வெளிக்காட்டாமல்
கம்பீர கண்டிப்பால்
மிளிர்பவரே அப்பா!

பொத்தல் பனியனையும்
காதருந்த செருப்பினையும்
தூக்கிப்போட
மனம் வராத
பொறுப்பாளி ஆளுமையே
அப்பா!

பேர் சொல்லும் பிள்ளைகள்
ஊர் மெச்ச வாழ்ந்திட
சுக துக்கத்தை
மறந்த தெய்வமே
அப்பா!

இதயத்தின் ஓரத்தில்
ஊற்றெடுத்து
விழிநீரில்
வழிந்தோடும்
பாசப்பெட்டகமே
அப்பா!

அப்பா...
கவிதையல்ல...அனுபவம்!
எழுத்துக்களில்
அடங்காத
காவியம்!!!!
_ தேவ கருணாகரன்

எழுதியவர் : வீ ஆர் கே (21-Jun-21, 9:44 pm)
Tanglish : appa yenum kaaviyam
பார்வை : 34

மேலே