மறுபடியும் பிறக்கட்டும் மழைத்துளிகள்
வான் மழையே;
வந்த மழையே;
பால் நிலவும் பழுக்கட்டும்,
பட்ட சூரியனும் துடிக்கட்டும்,
வான் மழையே,
வந்தே மீண்டும் பொழிந்திடு மழையை;
விழுந்தே ஓடிடு;
நதியாய்ப் பிறந்து உருண்டே ஓடிடு
மலை மேடு முகடுகளில்;
நடந்தே சென்றிடு சமவெளியில்;
நதியே,
நதியில் வழிந்த நீரே,
நீரில் மிதந்த துளியே,
விண்ணைப் பிளந்து,
விழுந்தே ஓடி விரைந்தே வந்து,
பிளந்த பள்ளத்தில் விழுந்து,
தவழ்ந்த மழையே;
வந்து,
தள்ளாடிய பயிரை வளர்த்து,
மண்மடியில் அமர்ந்து,
மண்ணினுள் புகுந்து,
குளத்தில் கொப்பளித்து,
குதுகலமாய் குட்டையில் வடிந்து,
தெப்பமாய் நிறைந்து,
ஏரியாய் விரிந்து,
வடிகாலில் விழுந்து,`
எழுந்த குழியெல்லாம் நிறைந்து,
காடு கழனியில் திரிந்து,
மீண்டும் நதியாய்ப் பிறந்து,
உவர்ப்புக் கடலில்,
ஊடல் கொண்டு,
ஈரம் சொட்டிய காற்றாய்,
நீர் கொண்ட மேகமாய்,
ஆகாயத்தை நனைத்து,
மீண்டும் பிறந்தாய் மழையே.
சாரளாய் துரளாய் மழையாய்,
வெள்ளமாய்.
அன்னை தந்த பால்த்துளியில்,
தளிர்த்தது குழந்தை,
விண்தந்த துளியில்,
பூமியில் ஜீவன்கள் தலைத்தது.
தாங்கியது மழலையை அன்னை அங்கே
இங்கு தாங்கியது மழையை மண்ணே;
ஆகாயத்திற்குத் தெரியுமா,
மழையின் அதிசயம்.
மனிதனே உனக்கேன் அலட்சியம்,
ஆகாயத்தில் தானாய் உதிக்கவில்லை,
தூவும் மழைத் துளிகள்.
விதையுங்கள் விதையை,
வளரட்டும் மரம் செடி கொடிகள்,
வரட்டும் காற்றும்,
நீராய் உருமாறட்டும், பருவமழை
வந்தே நனைக்கட்டும் மண்ணை.
விண்னென்ன விளை நிலமா,
மண்ணென்ன மழைக்குடமா,
மண்டட்டும் உறவுகள்,
மறுபடியும் பிறக்கட்டும்
மழை துளிகள்.