தர்மம் தலைகாக்கும்
தர்மம் தலைக்காக்கும்..!
இவருக்குத் தானென்றறியாமல்
இல்லையென்று கூறாமல்…
இப்படித்தான் செய்வேனென்று
வரைமுறைகள் பாடாமல்….!
இங்குதான் நல்லதென்று
இடந்தேடி அலையாமல்…!
இறக்ககுணம் தோன்ற
பரந்தமனம் போதுமே… !
அந்தஸ்து ஆஸ்திகள்
ஆயிரம் கொட்டியிருந்தும்… !
அடுத்தவர்க்கு ஈயாகுணம்
அடுப்பறைக்கு ஒப்பாகும்… !
அன்போடு அள்ளிக்கொடு
தர்மமெதுவென்று தேடுகையில்..
ஆங்கேவோர் ஏழைக்கு
பசியாற்றி பார்ப்பீரோ… !
பசியில்லா மானுடர்தன்
நாடுடைய கோமகனே… !
பஞ்சமற்ற வளமான
மக்களுடைய செங்கோலன்… !
பத்தாயிரம் படைகளிருந்தும்
அவைநல்ல வீரம்செறிந்தும்… !
பட்டென்று நீளாக்கை
பட்டானாலும் சாம்பலே… !
உயர்வென்றும் தாழ்வென்றும்
தர்மப்பார்வை கிடையாது… !
உள்ளத்தால் உயர்வாரே
உயிர்களிடத்தில் கனிவுள்ளவரே !
உற்றவுதவி என்றைக்கும்
உபத்திரவம் காணாதே… !
உலகேயெதிர்த்தாலும் அசைக்க
முடியா பலங்காணுவீர்… !
பிறர் பொருளை அள்ளி
கொடுக்க ….
பித்தலாட்டம் கிடையாதே
தன்னுழைப்பால் தீப்போலே..
பிழைப்பெய்தி கொடுத்தலே
தர்மத்தின்கால் கொள்வரே…
பிழையற்ற மெய்ஞானம்
பாங்காய் கொடுப்பதாலே… !
செய்த தர்மம் ஒளியாதே
நம்மோடு… !
செல்கின்ற இடமெல்லாம்
நிழல்போலே பின்தொடரும்..
ஆயிரம் தவம் புரிந்தாலும்
ஒருவன்தன்… .
தர்மம்போல் காப்பதேது
வேறொன்று மில்லையே… !
ஸ்ரீவித்யாகலைவாணி… .
ஆற்காடு… .