மனம் பேசிய மௌனம்

நமக்குள் காதல் பிறந்தது
இடைவெளி மறைந்தது
வானும் நிலவும் போல்
நம் காதல் வளர்ந்தது ..!!

இடையில்
நமக்குள் பிணக்கு
காதல் கசந்தது
மீண்டும் நமக்குள்
இடைவெளி பிறந்தது
காதல் மறைந்தது ..!!

இதுதான்
காலத்தின் கோலமென்று
காயங்களுடன் மனம்
மௌனமாக பேசியது ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (6-Sep-21, 6:47 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 1425

மேலே