மௌனம்
"மௌனம்" என்பது
வார்த்தைகள் இல்லாத
ஒரு மொழி தான்...!!
"மௌனத்தை" கடைபிடிக்கும்
மனிதர்களுக்கு
பிரச்சனைகள் குறைவு என்பதும்
இருக்கின்ற பிரச்சனைகளும்
"மௌனத்தில்"
மெல்ல கரைந்துவிடும்
என்பது உண்மைதான் ..!!
ஆனால்...
பேச வேண்டிய இடத்தில்
பேசாமல்
"மௌனமாக" இருந்தால்...!!
அந்த
"மௌனமான" நேரங்களே
பிரச்சனைகளுக்கு
பாலமாக அமைந்து
மனதில் காயங்களை
ஏற்படுத்தி விடும் ...!!
--கோவை சுபா