ஆயிரங் கோடி

.

நேரிசை ஆசிரியப்பா

கேடு கெட்ட தமிழா கேளும்
நாடிக் கெட்ட மூடரை ஆட்சியில்
தேடித் தேடி இங்கும் அங்கும்
எங்கும் தேர்ந்து என்ன கண்டாய்
நல்லார் தள்ளி தலையில் கொள்ளி
வைத்துக் கொண்டாய் வாயா டிகளின
பேச்சு தெருக்கூத் தாடி பேச்சு
என்று புரியா ஆள விட்டாய்
கூத்தா டிகளை ஆள விடவா
சுதந்திரம் பெற்றாய் கூத்தென
அவர்வா ழைப்பழம் தந்தாண் டாரே

சாயி பாபா ஆபர்ட்ஸ் பரியும்
கோடியும் சென்னை தண்ணீர் பஞ்சம்
தீர்க்க கொடுத்தான் வேண்டா மென்றாள்
பெண்சர் வாதி காரி
ராணி என்ற நினைப்பிலாண் டாளே.


அகநா னூறு புறநா நூறு
என்றே பேசி ஒட்டி கையில்
அகப்பட் டதையெல் வாரி சுருட்டி
சொந்தம் வாடி சிறைசென் றாரே
வடக்கில் மானங் கெட்ட
கொள்ளைய ரை மீண்டு தேர்ந்த தேனோ



அறிவில் லாவவன் வாரிசாய் .. முப்பத்
தெட்டும் நடுவண் அரசில் கூத்து
ஆடுது. அங்குபோய் நாட்டு நலனை
பேசா மந்திகள் போல்சிரிக் கின்றதே
ஐம்பதாண் டுக்கு ஆயிரங் கோடி
வட்டியி லாக்கடன் எல்லார்க் குந்தர
அவரவர் பெற்று நாட்டினர்
முன்னேற் றங்கண் டுசெழித் தாரே

தமிழக மண்டுகள் ஆயிரங் கோடி
வட்டி யில்லாக் கடனை வாங்க
மனுவைக் கூட இன்னும் கொடுக்கா
தமிழின் பெருமையே பேசி வருகிறது
ஐம்பது வருடத் திற்கு இல்லை
வட்டி ஆயிரங் கோடி தந்தார்
தந்ததை வாங்கி தமிழ்நாட் டினையும்
வளம்பெற திட்டம் தீட்டா
விட்ட முப்பத் தெட்டுபா விகளே


.......

எழுதியவர் : பழனி ராஜன் (20-Sep-21, 9:39 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 87

மேலே