தேனோடு உன்னிதழை ஒப்பிட்டால் மதுக்கிண்ணத்திற்கு கோபம்
மீனோடு உன் விழியை ஒப்பிட்டால்
மானுக்கு கோபம்
தேனோடு உன்னிதழை ஒப்பிட்டால்
மதுக்கிண்ணத்திற்கு கோபம்
வான் நிலவோடு உன் முகத்தை ஒப்பிட்டால்
பொழில் தாமரைக்குக் கோபம்
உனக்கு உவமை எதுவும் இல்லை என்று எழுதினேன்
என் கவிதைக்குச் சந்தோஷம் !