பூஜைக்கேற்ற நாளிது
பூக்களோடு புத்தகங்களையும்
பூஜை அறைகளில் வைத்து
வணங்கி மகிழும்
சரஸ்வதி பூஜை நாள்...
ஆட்டோக்காரர் முதல்
டாட்டா கம்பெனி வரை
ஆனந்தமாய்க் கொண்டாடும்
ஆயுத பூஜை நாள்...
ஊரெல்லாம் சந்தனம் சாம்பிராணி
அகர்பத்தி.. மலர்களின் வாசம்...
உன்னத உணர்வுகளில் உள்ளங்களில்
மகிழ்ச்சி தென்றல் வீசும்...
தொடரும் உலகம்... அதற்கு
இன்று இன்னொரு ஆரம்பம்...
சுற்றும் பூமி... நமக்கெல்லாம்
அருள் புரியட்டும் சாமி...
அனைவருக்கும்...
சரஸ்வதிபூஜை... ஆயுதபூஜை
இனிய நல்வாழ்த்துக்கள்...
அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.
🌹💐👏👍🙏😃