உண்மை கசக்கும்
பொய் பேசுபவர்கள்
எங்கே வேண்டுமானாலும்
எந்த கவலையும் இல்லாமல்
பேசிவிட்டு செல்வார்கள் ...!!
உண்மை பேசுபவர்கள்
இடம் அறிந்துதான்
பேசுவார்கள் ,,,!!
உண்மை பேசுவதில்
பலருக்கு தயக்கம்
இருக்கும் ...!!
ஆனால்
உண்மையை அறிந்து
கொள்ள எல்லோருக்கும்
ஆர்வம் அதிகம் இருக்கும் ..!!
உண்மையும்
நெல்லிக்கனி போல்தான்
முதலில் கசக்கும்
முடிவில் இனிக்கும் ...!!
--கோவை சுபா