தமிழச்சைவங் கண்டநீதி நூல் மதுமாது சூதழிக்கும் உலகை

நேரிசை வெண்பா


பாவலர் டாக்டர் திரு கன்னியப்பர் திரிகடுக நேரிசை வெண்பாப் பாடல்
கருத்தின் அடிப்படையில் மற்றொரு வெண்பாவில் குறளும் எழுதப்
பட்டுள்ளது


வேசைப் பொருளாசை வீழ்த்துமே வீதியோரை
ஆசையிலீட் டச்சூது வல்லவழி -- பாசமிலை
அஞ்சாப் பிறன்கலயக் கள்ளெச்சில் உண்ணவும்
அஞ்சா மயக்கு மது.

வேசையின் பொருளாசை வீதியில் போவரை ஈர்த்து சீரழிக்கும் கள்ளின் மயக்கம்
மொந்தை எச்சிலைப் பொருட்படுதா மானங் கெடுவர். சூதில் பணம் சேர்க்க நினைத்துக்
கைப்பொருள் இழந்து இன்னும் கெடுவது திண்ணம் என்பதாம்.


குறள் வெண்பா
விந்தை மயக்கமாமெச் சில்மொந்தைக் கள்ளுடன்
சிந்துமோகஞ் சூதழிக்குங் கேள்

எழுதியவர் : பழனி ராஜன் (5-Nov-21, 5:43 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 35

மேலே