இயேசு பெருமான்

உலகத்தின் மீட்பர்.. ரட்சகர்...
இயேசு பெருமானின் ஜனனம்
நிகழ்ந்தது தெய்வ அம்சம்
தவழும் மாட்டுத் தொழுவம்...
எளிமையை இது பறைசாற்றும்...

இனிய நாள் இதை எண்ணி
பூமியெங்கும் சந்தோசப் பூக்கள்
உள்ளங்களில் பூக்கும்...

தேவகுமாரன் இயேசு பூமிக்கு
வந்த நாளில் இதயங்கள்
ஆனந்த வானில் மிதக்கும்...

வண்ணமிகு எண்ணங்களில்
பூக்கும் அன்பு மலர்களின் வாசம்
மானுட மனங்களில் என்றும் வீசும்..

கிறிஸ்துமஸ் கேக்.. ஸ்டார்.. மரம்..
தாத்தா.. பரிசு.. பாட்டு.. வாழ்த்து
குடில்கள்.. புத்தாடைகள்...
கொண்டாட்டம்... குதூகலங்கள்
தரும் உள்ளங்களில் உற்சாகம்...

ஒட்டுமொத்த உலகு
இன்று மிக மிக அழகு...
பூமி இன்று புதிதாய்த் தோன்றும்..

வானத்து நட்சத்திரங்கள்
பூமிக்கு வந்தாற்போல்
வீடுகள் எல்லாம் வெளிச்சம்...

தேவாலயங்களின் மணியோசை
உலகம் முழுமைக்கும் ஒலிக்கும்...
அது அன்பு.. மனிதநேயம்...
கருணை.. சமாதானம் பரப்பும்...

எல்லோருக்கும் என் இனிய
கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்...

அன்புடன்.. ஆர்.சுந்தரராஜன்
👍🌹💐🍫🌺🌸🎂

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (25-Dec-21, 10:15 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : iesu peruman
பார்வை : 75

மேலே