"என் அன்பிற்குரிய நண்பனுக்கு (ஈஸ்வரனுக்கு) பிறந்தநாள் பரிசு"


பிறந்த நாள் வாழ்த்துகள் (13/10/2011)
என் ஆருயிர் நண்பன் ஈஸ்வரனுக்கு.....

முழு பெயர் தெரியாது...
முழு விவரம் தெரியாது...
எப்படி கலந்தான் என்னுள் முழுவதுமாய்...
என் முழுவதுமாய்...

மெல்லிசை உணர்திருக்கிறேன்...
கவி உன் சிந்தையில் ஊறுகின்ற
வேளையிலே சொல்லிசை பிறப்பதை உணர்ந்தேன்...

உன்னைப்பற்றி கவி தொடுக்கிறேன்
என்னை வாசித்த முதல் கவியல்லவா நீ...

கோபத்திற்கும் உன்மேல் காதல்....
நீ கோபம் கொள்ளாத நாட்களில்
கோபத்திற்கும் உன்மேல் கோபம் வருமடா...

காதலிப்பவன் கவிஞனாவதை பார்த்திருக்கிறேன்...
கவிஞனை காதலிப்பவனல்லவா நீ...

நீ என்னுடன் நட்பு பூணுவதற்கு
நான் வெறும் வார்த்தை கொடுத்தேன்...
உன்னை ஆள்வதர்க்கே எனக்கதிகாரமிட்டாய்...

நண்பா உன் புகைப்படம் ஒன்றை கொடு...
இவன் என் நண்பன் என எடுத்துக்காட்ட அல்ல,
நட்புக்கு இவன் தான் எடுத்துக்காட்டு என காட்ட...

கடவுள் நம்பிக்கை இல்லை எனக்கு
இப்பொழுது நம்புகிறேன்...
உன்னை எனக்களித்த உன் அன்னையே எனது
முதல் கடவுள்....

கடவுள் நம்பிக்கை இல்லாத என் வாயாலும்
கடவுள் பெயர் சொல்ல வைத்து விட்டாயடா

ஈஸ்வரா......

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (1-Oct-11, 8:35 pm)
பார்வை : 3087

மேலே