மகிழ்வும் மறையும்
மகிழ்ச்சி தேடி
மது உண்ட மந்தி போல
மக்கள் அலைவதும்,
பிறர் மகிழ்ச்சி கண்டு
பொறாமை பட்டு
தனக்கும் இறைவன்
தரவில்லையே என்பது
தர்மமா?
தான் விரும்பியது
தனக்கு மகிழ்ச்சியென்றால்
எப்படியாவது அடைய
எண்ணம் தோன்றாதா ?
வரம்பை மீறும் ஆசைகள்
வாழ்வைக் கெடுக்கும்
மனம் சீரழியும்
மகிழ்வும் மறையும்