வேண்டுவன
மண் பயனுற வேண்டும்
மக்கள் பயம் தெளிய வேண்டும்!
மருந்து கொள்ளாத தேகம் வேண்டும் மக்கள் இன்னல் தீர வேண்டும்!
மலர் போல் வாசம் வீச வேண்டும்! மழைபோல் ஈரம் சுரக்க வேண்டும்! மழலை மொழி பேச வேண்டும் !
மரம்போல் பிறர்க்கு வாழ வேண்டும்!
மண்போல் யாரையும் தாங்க வேண்டும்!
மான்போல் துள்ளும் இளமை வேண்டும்!
மருட்சியில்லா மனம் வேண்டும் மாற்றாரை மதிக்கும் குணம் வேண்டும்!
மாக்கள்போல் நடவா அறிவுவேண்டும்!
மாதொரு பாகன் நல்லருள் வேண்டும்!
மாற்றம் எப்போதும் வேண்டும்! மாண்புகள் கூடிடவே வேண்டும்!
மகான்கள் தோன்றிட வேண்டும்!
மதியை தன்கைகள் எட்டிட வேண்டும்!
மலைகள் படிக்கட்டுகளாகிட வேண்டும்!
மதசாயங்கள் வெளுத்திட வேண்டும்!
மனிதம் அன்பால் வழிந்திட வேண்டும்!
மண் வெறி ஒழிந்திட வேண்டும்!
மனம் போல் வாழ்வு மலர்ந்திட வேண்டும்!
மரங்கள் நட்டிட வேண்டும்!
மண் பயனுறவே!!