மனம்விட்டு பேசி சிரித்தாலும் 555
***மனம்விட்டு பேசி சிரித்தாலும் 555 ***
நட்பு...
நீயும் நானும்
பழகினது தவறில்லை...
அன்பும் பாசமும் அதிகமாக
வைத்ததும் தவறில்லை...
உடன்பிறப்புகளை
போல கண்டிக்கும்...
உரிமை
எடுத்துக்கொண்டதும் தவறில்லை...
இனங்கள் வெவ்வேறாக
பிறந்ததுதான் தவறு...
ஆண் இனம்,
பெண் இனமென்று...
பார்க்கும் சமூகம் ஆண், பெண்
தவறாகவே நினைக்கிறது...
நம்முடன் சுற்றி
இருப்பவர்களும் தவறாகவே...
ஆண் பெண் பழகினால்
காதலாகத்தான் இருக்க வேண்டுமா...
அதில் களங்கமில்லா
உறவுகள் இருக்க கூடாதா...
நாகரிக வளர்ச்சியென
பெருமை கொள்ளும்...
இன்றைய சமூகத்திலும்...
ஆண், பெண் நட்பை
கொச்சைப்படுத்தியே பார்க்கிறது...
சமூகம் மட்டுமல்ல
உடன் இருப்பவர்களும் கூட.....
***முதல்பூ .பெ .மணி .....***

