நண்பரின் இழப்பு
என்று திரும்புவாய் இனிய தோழா!
சிறு வயது முதல் நட்பு... ஒன்றா வளர்ந்தோம்...
ஒன்றா போவோம்.. இணைபிரியாத
நண்பர்கள்..!!
முகம் காண வாய்ப்பில்லை தோழா!
ஓடிவரச் சாதனங்கள் ஏதுமில்லை,
இளம் வயதில் பல சாதனைகள் செய்தோம்.
பறவைகள் போல் ஒன்றாகத் திரிந்தோம்.
ஒன்றாக உண்டு மகிழ்ந்தோம்.
கலைகளை கற்றோம் வெற்றி கண்டோம்
கோவிலை எழுப்பினோம்.
கவிதையாய் பொழிந்தோம்
இடைவிடாத குறும்புகள் செய்தோம்,
இணைபிறாவா சகோதரர்களாக. இருந்தோம்
.
கல்வியில் நிலை கண்டோம்.
கற்றவருக்குப் பெருமையாய்.
உற்றாருக்கு உண்மையாய்.
உடன் பிறந்தோர்க்குப் புகழ் தந்தோம்!
சிறந்தவனாயிருந்தோம்,
தொலைதூரக் சென்றபின்
உன்னைக் காண ஓடிவருவேன். இன்று
இல்லையே தொழா!
கண்காணாத இடத்திற்குச் சென்றுவிட்டாய்
என்றெறிந்தேன்!
திரும்பிவா தொழா!!
நம்பிக்கைக்குரிய நண்பனாய்
உற்ற தோழனே! இணைபிரியா நண்பனே!
அன்பின் சகோதரனாய்
இவ்வுலகில் நீ வாழ
இடம் ஒன்று இல்லையோ
என்மனதில் என்றும் உன்னை வாழவைக்கிறான்
வந்துவிடு தோழனே! ...
எழுந்து வந்துவரவேர்க்கும் நீ ,
இன்றுமட்டும் ஏனடா நண்பா
இப்படி உறங்குகிறாய் ?
எழுந்துவாடப் பங்காளி என
ஏக்கமாய் அழைக்கிறேன் ,
எதையும் காணாததுபோல்
எழுந்துவர மறுக்கிறாயே சத்தி !
நெஞ்சு அடைக்கிறது நண்பா
மாரடைப்பில் மரணிக்கும் வயதா உனது
என எண்ணிப்பார்க்கும் வேளையில் - என்
நெஞ்சு அடைக்கிறது நண்பா...
இந்த காட்சியை நானும் காணவா
இனிக்க இனிக்க வந்து
நட்பு கொண்டாய் சத்திய நாராயண மூர்த்தி!
நீ என்னைவிட்டுச் செல்லவில்லை
என் நினைவுகளில் தங்கிவிட்டாய் .
உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
நம் தாத்தா எழுதிய குறளுக்கு
என் தந்தை அழுத்தமாகா சொன்ன சொல்லுக்கு!
என்னைக் காணாமல் நீர் உறங்குகிறாய்!
என்று காண்பேன் தோழா!