மடிசார் அம்புஜம்

மாமா: அம்புஜம், ஏய் அம்புஜம்
அம்புஜம்: சொல்லுங்கோண்ணா
மாமா: நீ அடிக்கடி ஒன்பது கஜம் புடவை கட்டிக்கோ.உனக்கு அது பாந்தமா இருக்கு.
அம்புஜம்: எனக்கு ஆறு கஜம் தாண்ணா எப்போதும் உடுத்தும் போதும், உடுத்த பின்னும் சௌகரியமாக இருக்கிறது.
மாமா: அட ஏன்டி அப்படி சொல்றே. நம் பக்கத்து வீட்டு மாமா நேத்து என்கிட்ட பேசிண்டிருந்தப்போ 'உங்காத்து மாமிக்கு மடிசார் புடவை ரொம்ப நன்னா இருக்கு'ன்னு சொன்னார்.
அம்புஜம்: பக்கத்தாத்து மாமா எதிராத்து மாமா சொன்னார்னு நான் என் புடவை முறைகளை மாத்திக்க முடியாது.
மாமா: சரி அப்போ எனக்கு வேண்டி மடிசார் கட்டேன்டி.
அம்புஜம்: சரி கட்டிக்கிறேன் ,அப்பப்போ
மாமா: இப்போது உன்கிட்ட மூணு ஒன்பது கஜம் புடவைகள் தான் இருக்கு. இன்னும் ரெண்டு வாங்கிக்கோ.
அம்புஜம்: பேஷா.. ஆனால் ரெண்டு புடவையும் பக்கத்தாத்து மாமா தான் வாங்கி தரணும்.
மாமா: அடி அம்புஜம், அதென்னடி அப்படி சொல்றே. உனக்கு புடவை வாங்கித் தர அவர் யார்?
அம்புஜம்: இப்போ புரிஞ்சுதா, பின்னே அவர் ஆசைப் படறார்னு நான் ஏன் மடிசார் கட்டணும்?
மாமா: நேக்கு இப்போது நன்னா புரிஞ்சு விட்டது, இனி இந்த மாதிரி காரியங்களை நான் செய்ய மாட்டேன்.
நீ ஆறு கஜம் கட்டினாலும் ஒன்பது கஜம் கட்டினாலும் நான் தான் உன் ஆத்துக்காரன். எதை கட்டினாலும் கட்டாவிட்டாலும் உன் அழகு யாருக்குடி வரும்?
அம்புஜம்: இப்படி எல்லாம் அச்சுபிச்சுன்னு உளராதீங்கோ. நீங்க தான் எனக்கு எல்லாம். அது போல நான் தான் உங்களுக்கு எல்லாம்.. இருங்கோ, இப்போ சுடச்சுட பில்டர் காப்பி போட்டுத் தரேன்.
மாமா: காபி மாத்திரம் இல்லை. நீயும் நல்ல சுடச்சுட தான் இருக்கே
அம்புஜம்: பார்த்தேளா,மறுபடியும் உளர ஆரம்பிச்சுட்டேள்.

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (8-Mar-22, 12:14 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 66

சிறந்த நகைச்சுவைகள்

மேலே