அன்பு காட்டும் ஈர்ப்பு விசை

உலகத்தில் உதித்த
கவிஞர்கள் யாவரும்
எழுதிய பின்னரும்
எழுத நிறைய உள்ளது
ஒன்றே ஒன்று... அது
மகளிர் சிறப்பு...

கவிஞன் ஒருவன்
எழுதியவற்றுள் எல்லாம்
சிறந்தது எதுவெனில்
அது பெண்மையின் சிறப்பை
சிறப்பாய் எழுதுவது...

மல்லிகைப் பூக்களை
வெல்ல மல்லிகைப்
பூக்களால்தான் முடியும்...
மகளிரை வெல்ல
மகளிரால்தான் முடியும்...

மகளிர் குலம்... அது வீடு..
நாடு.. உலகம் எங்கிலும்
அன்பு காட்டும் ஈர்ப்பு விசை..
அதுவே எல்லோர்க்கும்
வழிகள் காட்டும் கிழக்கு திசை..

மகளிர் அனைவருக்கும்
மகளிர் தின வாழ்த்துகள்...
அழகிய பூமி இன்னும் அழகு
பெறுகிறது பெண்கள் இங்கு
பிறந்து வளர்வதால்...
👏👍🌹😀🙏🌸

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (11-Mar-22, 9:57 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 348

மேலே