கண்ணீரில் வளரும் காதல் மலர் 555

*** கண்ணீரில் வளரும் காதல் மலர் 555 ***



என்னுயிரே...


நாம் சேர்ந்திருந்த
நினைவுகள்தான்...

என் தொலைதூர பயணத்தில்
துணையாக வருகிறது...

உனக்குள் இருக்கும் காதலை
உயிருடன் புதைத்துவிடாதே...

உனக்கே தெரியாமல் நீ பல
இரவுகள் விழித்திருப்பாய் உறங்காமல்...

நீ கொஞ்சம்
நினைவு கூர்ந்துபார்...

இன்றும் உனக்குள் நான்
இருப்பது நீ உணர்வாய்...

நீ கொடுத்த இந்த பிரிவு
வலிகளை கொடுத்தாலும்...

உன்னை வெறுக்க
எப்போதும் நினைத்ததில்லை...

ஓயாத கடல் அலைகளும் உன்
நினைவுகளும் எனக்கு ஒன்றுதான்...

காற்றில்
கலையும் மேகம்போல...

உன் மெல்லிய புன்னகையில்
என் சோகம் எல்லாம் கரையும்...

நீயும் நானும் சேர்ந்து
வளர்த்த காதல் மலருக்கு...

தினம் கண்ணீர் ஊற்றுகிறேன்
வாடாமல் இருக்க...

வீட்டு கண்ணாடியில் முகம்
பார்க்கும் போதெல்லாம்...

நீயும் என்னுடன்
இருப்பதாய் ஒரு உணர்வு...

என்று நிஜமாகுமோ இல்லை
நிழலாக மறையுமோ...

உனக்காகவே
நான் வாழ்கிறேன்.....


***முதல்பூ .பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (25-Mar-22, 5:35 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 206

மேலே