தயவுசெய்து பதில் சொல்லுங்கள் -sagi
இப்பதிவு சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை....
தவறாக இருந்தால் மன்னிக்கவும்....
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்...
அவள் கணவன்
எத்தனை பெண்களிடம் தோழமையுடன் பேசினாலும் தவறான பாதைக்கு செல்ல மாட்டான் என்று நம்பி
இருந்தாள்...
ஆனால்
அவன் ஒரு
பெண்ணிடம் ஆசையாக பேசிய உண்மை அறிகிறாள்...
என் கேள்வி
இது தான்?
அப்போது அவன்
காதல் திருமணம்
செய்து கொண்டவளை
மனதார உண்மையாக விரும்ப வில்லையா???
ஓர் அழகிய
ஆண் குழந்தை உள்ளது. அக்குழந்தையின் எதிர் காலம் பற்றி எண்ணம் இல்லையா ஓர் தந்தையாக????
கரம் கோர்த்து
தன் வாழ்வை நம்பி
கொடுத்தாலே அவளுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம்,குற்ற உணர்ச்சி இல்லையா????
அவளை, அவளுடன் வாழ பிடிக்கவில்லை எனில் சொல்லி விலகி தான் கள்ள தொடர்பு வைத்த பெண்ணுடனே வாழ்த்திருக்கலாமே????
பொய்யான பாசத்திற்கு அடிமையான அவள்
இனி அவனுடன் சேர்த்து வாழ விரும்ப வில்லை.
உங்கள் கருத்தை
தயவுசெய்து பகிருங்கள்....
உங்கள் சகோதரியாக எண்ணி.....
மன்னிக்கவும்