கொள்ளுக் கஞ்சி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கொள்ளுந்தண் டூலமுமாய்க் கூட்டியடுங் கஞ்சியது
கொள்ளுங்காற் றீபனத்தைக் கூறுவதோ - எள்ளை
நசிக்கிப் பிழிபலமும் நல்விந் துவுமே
வசிக்குங் கிழவ(ர்)கட்கும் வை

- பதார்த்த குண சிந்தாமணி

கொள்ளும், அரிசியும் சேர்த்துக் காய்ச்சிய கஞ்சியைக் குடித்தால் அதிகபசி, நற்பலம், வீரியவிருத்தி இவை உண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Apr-22, 9:12 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே