புரியும் ஆனால் புரியாது

புரியும் ஆனால் புரியாது;
புரியாது ஆனாலும் புரியும்;
புரிவது புரியும்;
புரியாது புரியாது;
புரியாது புரியும்;
புரிவது புரியாது;
புரியாத சில புரிவது போல் புரியாது;
புரிவது போல் உள்ள சில புரிந்தும் புரியாது;
புரியாத சிக்கல் புரிந்தவுடன் நீளாது;
புரியாத பாசம் பிரியும்;
புரியும் பாசம் தொடரும்;
புரியாத வாழ்க்கை புழுங்கும்;
புரியும் வாழ்க்கை பழ(கும்)கிப்போகும்;
புரியாத மனம் குழம்பும்;
புரியும் மனம் குளிரும்;
புரியாத மனிதன் புலம்புவான்;
புரிந்தவன் புத்திசாலித்தனமாய் நடப்பான்;
புரிவதெல்லாம் அறிவில்லை;
புரிந்தெல்லாம் ஆற்றல் இல்லை;
புரியாத புதிர் புதைந்து கிடக்கும்;
புதிர் உடைந்தபின் புரியும்;
புத்திக்கு எட்டினாலும் புரியாதது,
புத்திக்கு எட்டாமலே புரியும்;
உண்மைக்கு பொய் புரியாது;
ஊமைக்கு புரியும் பாஷை உனக்கு புரியாது;
எடைபோட தெரிந்த மனிதனுக்கு ,
உன் உள்அன்பு புரியாது;
எடைபோட பொருளை சுமக்கும் திராசுக்கு, உண்மை எடை எதுவென்று புரியாது;
தடைபோட புரிந்த சட்டத்திற்கு;
உண்மைத் தவறு எது என்று புரியாது;
தவறே செய்யாத உள்ளத்திற்கு,
தடுமாற்றம் எதற்கு என்பது புரியாது;
புரியும் நட்டுபுக்கு பிரியத்தெரியாது;
மனதில் புதைந்து கிடக்கும் மர்மம்,
மற்றவற்களுக்கு புரியாது;
உண்மைக்கு பொய் புரியாது;
பொய்க்கு உண்மை புரியாது;
கண்ணீருக்கு புரிந்த கருணை, கண்ணுக்குத் தெரியாது;
கவலைக்கு புரிந்த சோகம்,
கண் உறக்கத்தில் தெரியாது;
பனி துளிகளை சுமக்கும் புள்ளுக்கு குளிரின் நடுக்கம் புரியாது;
படிப்பறிவால் தெரியாத புரியாத உண்மைகள், அனுவப்படிப்பால் புரியும்;
சிரிப்புக்கு பின் புதைந்து கிடக்கும் குரோதம் புரியாது;
புரியாத உறவு புலம்பால் விடாது;
புரியாத உறவில் புனிதம் தேட முடியாது;
புரியாத அன்பை தேடி போகக் கூடாது;
பிடிக்காதவர்களின் திசைப் பக்கம் திரும்பக்குடாது;
புரியாத பிரியம்;
பிரியும்போது புரியும்;
பிரியாத பிரியம்;
உயிர் பிரியும் போது புரியும்;
புரியாத கையெழுத்து;
புரட்டிப்போட்டது உன் தலை எழுத்து;
புரியாத புதுமாற்றங்கள்;
புரியவைக்கும் தடுமாற்றங்கள்;
புரியாத போது வாழ்க்கை தொடகின்றது;
புரிந்தபோது வாழ்க்கை முடிவடைகின்றது;
சொன்னால் புரியாது;
பட்டால்தான் புரியும் ;
வந்தால் புரிகிறது;
வறுமையும் வசந்தமும் என்ன வென்று;
புரியும் சடங்குகள்;
புரியாத சம்பிரதாயங்கள்;
புரியும் பொழுது புரியாத புலரல் (அலரல்)
புரியம் புரியும்;
உனக்கு எல்லாம் புரியும்;
எதுவும் நிரந்தரம் இல்லை என்று புரியும் போது;
புரியாததும் புரியும்; புலம்பலும் நிற்கும்;
புரிந்தைவைகள் உனக்கு தெரிந்தைவைகளாக இருக்கலாம்;
புரிந்தவை தெரியாதவைகளாக இருக்கலாம்;
தெரிந்தவை உனக்கு புரியாதவைகளாக இருக்கலாம்;
புரியாதவைகள் தெரியாதவைகள் தெளியாதைவைகளாக இருக்கலாம்
புரியாதது புதிர்;
புரியாத புதர் புரியாது போது
புதிரே புதிர்;
புரியாத புதிர் புரியும் போது;
புதிரே புரிந்தாலும் புரியாது;
எல்லாவற்றையும் புரிந்து கொள்ள நினைகாதே;
நில நேரங்களில் புரியாததையும் ஏற்று
புரிந்ததாக செயல்படு.;
புரிந்துகொள், தெரிந்துகொள், புரியாது என்று தள்ளி போகாது,
தெரிந்து கொள்ள தெளிவாக இருந்துகொள்,
தெரிந்ததை தெரியவைப்பதிலும்,
புரிந்ததை புரியவைப்பதிலும் பிறக்கும் நிம்மதி;

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (14-May-22, 11:46 am)
பார்வை : 239

மேலே