ஒட்டைத்தயிர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தீபனமும் உண்டாஞ் சிறுகரப்பான் புண்ணுமாம்
பூபதிபோன் மேனி புளகிக்குந் - தாபதமாம்
ஒட்டைத் தயிர்நிதமும் உண்ணவதி தாகம்போந்
துட்டக் கிருமியறுஞ் சொல்

- பதார்த்த குண சிந்தாமணி

ஒட்டைத் தயிரினால் நற்பசி எடுக்கும்; சிறுகரப்பான், இரணம் இவை உண்டாகும்; தாகமும், மலக் கிருமிகளும் நீங்கும்; மேனி வனப்புண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-May-22, 11:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கவிதைகள்

மேலே