சோபா விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

நேரிசை வெண்பாக்கள்

அழகிய சோபா தனிலே உறங்கும்
குழந்தை விநாயக!; நீயே - எழுந்திங்கு
வந்தே எழுச்சியும் எங்களுக்குத் தந்தருள்வாய்
எந்தனைக் காப்பாய் இனிது! 1

சோபா தனிலே உறங்குகின்ற சுந்தரனே
நீபார்க்க எங்களது நெஞ்சத்தில் - தீபோன்ற
சங்கடங்கள் தீர்ந்திடுமே; சாந்தமான உன்பார்வை
எங்கள்மேல் வீழ்க இனிது! 2.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-May-22, 5:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே