தன்னிறைவு கொண்டமனம் தளர்வெதுவும் அறியாது - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(1, 5 சீர்களில் மோனை)

ஒன்றினையே நினைத்திருந்தும் ஊருக்கே
..வாழ்ந்திருந்தும் உயிர்,கொ டுத்தும்
அன்புகொண்டு வாழ்வதுதான் ஆக்கமென்று
..சொல்லிடுவேன் அறிந்து கொள்வீர்!
தன்னிறைவு கொண்டமனம் தளர்வெதுவும்
..அறியாது தகவாய்ச் சொன்னேன்;
இன்பமெலாம் வந்தணைக்கும் இன்னலெலாம்
..நீங்கிவிடும் ஏற்றந் தானே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jun-22, 10:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே