உன் விரல் பிடித்து நாம் செல்ல வேண்டுமடி 555
***உன் விரல் பிடித்து நாம் செல்ல வேண்டுமடி 555 ***
உயிரே...
உன் அன்பு என்னும் அழகால் என்னை கட்டிபோட்டுவிட்டு...
என்னை உனக்கு எவ்ளோ
புடிக்கும் என்கிறாய்...
உன் அன்பில்
கரைந்த நான்...
அளவுகோல் வைத்து
எப்படி சொல்ல முடியும்...
உன்னை
எவ்ளோ புடிக்கும் என்று...
இனிதான் ஆரம்பமாகும்
என் வாழ்க்கை போல...
ஒவ்வொரு நாளும்
என்னை உணரவைத்தாய்...
நாம் சந்திக்கும்
நாட்களிலெல்லாம்...
துன்பங்கள் பல
என் நிறைந்த வாழ்வில்...
இன்பமாக
வந்தவள் நீதானே...
நாம் பேசிய
வார்த்தைகளை எல்லாம்...
நினைத்து பார்த்து
சந்தோசம் கொள்கிறேன்...
இடைவெளிவிட்டு நடந்து
செல்லும் நாம்...
இனி விரல் பிடித்து
நடந்து செல்லவேண்டும்...
உன் முதல் முத்தம்
நடத்த வேண்டும்...
என்னில்
ஆயிரம் காதல் யுத்தம்...
என் விழிகளில் இனி
அமுத மழை மட்டுமே...
பெருக்கெடுக்க
வேண்டும் உன்னால்...
உனக்கு
சம்மதமா என் சகியே.....
***முதல்பூ.பெ.மணி.....***

