கனவெல்லாம் காதலி நீதான் வருகிறாய் 555
***கனவெல்லாம் காதலி நீதான் வருகிறாய் 555 ***
உயிரானவளே...
நீ என்னை
பார்த்த பார்வையும்...
உன்
மெல்லிய புன்னகையும்...
அந்த வினாடியில் காணாமல்
போன என் இதயம்...
நான் சுவாசிக்கும் காற்றில்
நீ கலந்திருக்கிறாய்...
உறங்கும் நேரத்தில் உன்
மடியே என் தலையணையாக...
நொடிக்கு நொடி
இதயம் துடித்தாலும்...
துடிப்பெல்லாம்
நீதான் இருக்கிறாய்...
இதயத்தையும் கனவுகளையும்
களவாடி சென்றவள் நீதான்...
இப்போதெல்லாம்
கனவுகள் வருவதில்லை...
கனவெல்லாம் காதலி
நீதான் வருகிறாய்...
புயலாக
மையம் கொண்டு...
பூ விழியால்
என்னை வென்றாய்...
உன்மீது
கோபங்கள் இருந்தாலும்...
உன் விழிகளில்
என்னை கண்டால்...
என்னை நான்
மறக்கிறேன் உயிரே...
உன் முழு காதலும்
எனக்குத்தான் தெரிந்தும்...
ஏனடி என்னோடு
இத்தனை நாள் மௌனம்...
மௌனம்
கலைத்துவிடடி என் மலரே.....
***முதல்பூ.பெ.மணி.....***