விழி பேசிய காதல் காவியம்

ஒரு நிலவை பார்த்தேன், ரசித்தேன்
இருவரும் காதல் கொண்டோம் உள்ளத்தால் ஆனால் சொல்ல மறுத்தோம் உதட்டால் இருவரும் சேரவில்லை இருமனமும் இணைந்தது
தினந்தினம் அவளை நினைத்து
நினைத்து உடைந்தது என் மனம்
சில காலங்களுக்கு பிறகு
அவள் நினைவுகளை மறக்க என் மனதை தூர்வாரினேன் கவிதையாக கொட்டியது எடுத்து படித்தேன் திரும்ப அவள் நினைவு என் மனதை இனிமையில் ஆழ்த்தியது

"பழக உறவில்லை
பறிக்க பூவில்லை
மறக்க மனமில்லை
என்றும் தூர்வாரிய கவிதை உண்டு".....அவளை நினைக்க

எழுதியவர் : சக்திவேல் மணி (20-Jun-22, 11:23 pm)
சேர்த்தது : சக்திவேல்
பார்வை : 166

மேலே