சிந்தனைக் கவிதை

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

இன்று...
நாளிதழ்கள்
தினமும் வெளிவருகிறது
இரத்தக் கறையோடு...!

💥💥💥💥💥💥💥💥💥💥💥

"மேலாடை இல்லாத"
சினிமா நடிகைகளே!
"வாரப் பத்திரிகைகளுக்கு" மேலாடையாக..!

💥💥💥💥💥💥💥💥💥💥💥

யானை
காட்டில்
இருக்கும் வரை....
"மதம்"
பிடிக்காமல் தான் இருந்தது...!

💥💥💥💥💥💥💥💥💥💥💥

"இரட்டை கிளாஸ்" முறையை வைத்திருக்கும்
தேநீர் கடைக்காரனே!
ஏன்
ஒன்றாக வைத்திருக்கிறாய்
"காசு போடும்
பெட்டியை மட்டும்..?"

💥💥💥💥💥💥💥💥💥💥💥

அன்று
"ஆண் பிள்ளை" என்பதைப்
"புலியைப் பிடித்து" நிரூபித்தனர்...
இன்றும்
நிரூபிக்கின்றன
"புகைப்பிடித்து...."

💥💥💥💥💥💥💥💥💥💥💥

இயக்குனர்களே!
நடிகைகளை
படப்பிடிப்புக்கு
வரும்போது
வீட்டிலேயே
குளித்து விட்டு
வரச் சொல்லுங்கள்...
படத்தில் வந்து 'குளிப்பதால்'
ரசிகர்களின் மனம்
'அழுக்காகிறது'

*கவிதை ரசிகன் குமரேசன்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

எழுதியவர் : கவிதை ரசிகன் (25-Jun-22, 10:11 pm)
பார்வை : 45

மேலே