என் நட்பு உனக்கு பொக்கிஷம்
பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்
பிறந்த நாளன்று உனக்காக
நான் எழுதிய வசனகவிதையை
உன்
பிறந்த நாளான
இன்றும்
படித்து பார்த்து ரசிக்கிறாய்
எனக்கும் அனுப்பி வைத்து
நினைவூட்டி செல்கிறாய்.,
உன்
திருமணத்தன்று
நான் அளித்த வாழ்த்துக்கவிதையையும்
அட்டையையும்
தாய் வீட்டு சீதனம் போல்
பாதுகாத்து வருகிறாய்..
உன்னைப் பற்றி நான்
எழுதிய குறிப்புகளையும்
எந்த குறையுமில்லாமல்
கவனித்துக் கொள்கிறாய்
நான் உன்னை விட்டு
எத்தனையோ தூரம்
தள்ளிச் சென்று விட்ட
போதும்.,
என் நட்பு உனக்கு பொக்கிஷம்...
உன்னைப் போன்ற
அன்பாளர்களால் தான்
இந்த உலகம்
இன்னும் நிலையாய்
இயங்கிக் கொண்டிருக்கிறது...
(என் உலகமும்)
அன்புடன் ஆர்கே..