மடலரிதாரம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’ளை’ ‘ழை’ இடையின எதுகை)

ஈளை யுடனே யிருமல் குடிவிலகுங்
கோழை மலமகலும் கொம்பனையாய் - நாளும்
அடலுறுக யங்கரப்பான் ஆறாப்புண் ணும்போம்
மடலரிதா ரத்தை மதி

- பதார்த்த குண சிந்தாமணி

மடலரிதாரத்தினால் ஈளை, இருமல், கோழை இவை நீங்கும்; மலம் இளகும்; கயம், கரப்பான், ஆறாப்புண் இவை விலகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Oct-22, 7:54 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே