என் சுவாசம் உன்னைவந்து சேரும் 555

***என் சுவாசம் உன்னைவந்து சேரும் 555 ***
உயிரானவளே...
தொலைவில் கார்மேகம்
தூறல் போட்டாலும்...
வீசும் தென்றலில்
மண்வாசனை மிதந்து வரும்...
கடல் கடந்து நீயும்
நானும் தனித்திருந்தாலும்...
வீசும் காற்றில் என் சுவாசம்
உன்னைவந்து சேரும்...
நாம் பார்த்தது எத்தனை நாள்
நாம் பேசியது எத்தனைநாள்...
கணக்கு
தேவையில்லை அன்பிற்கு...
உள்ளுக்குள் ஊரும் அன்பின்
ஊற்றே நம்மை சேர்த்ததடி...
சமுத்திரத்தில் நான் பாதம்
நனைக்கும் போதெல்லாம்...
உள்ளத்தில் ஒரு உணர்வு நீயும்
மறுகரையில் பாதம் நனைப்பாய்...
உனக்கு பிடித்த
மல்லியின் நறுமணத்தை...
தென்றலில்
நான் நுகர்கிறேன்...
நீ உதட்டில் பூசும்
ரோஜாவின் வண்ணத்தை...
பன்னீராய் என்
மேனியில் பூசிக்கொள்கிறேன்...
உலர்ந்துபோன
என் உதடுகளுக்கு...
நீ எப்போது
ஈரம் கொடுப்பாய்...
நீ எவ்வளவு
தொலைவில் இருந்தாலும்...
உன் நினைவுகள் என்னை
தொடர்ந்துகொண்டே இருக்கும்...
என்னுயிரே.....
***முதல்பூ.பெ.மணி.....***