கடவுள் நம் கானுக்கு புலப்படாதவன்

வானில் எங்கோ வெகுதூரத்தில்
விண்மீன்கள் மின்னுகின்றன அவற்றைக்
கண்டு இவை என்ன வானின்
மின் மினிப் பூச்சிகளோ என்று
நினைப்பின் அது நம் பார்வையில்
குறைப்பு பாடு மின்னும் இத்தாரகைகள்
நம் சூரிய சந்திரரை விட எத்தனையோ
ஆயிரம் மடங்கு பெரியவை.......
வானின் நட்சத்திரங்கள் இப்படி என்றால்
அவற்றைப் படைத்தவன் கண்ணுக்குப்
புலப்பட வில்லை அதனால் இல்லாது
போய்விடுவானா இல்லை அப்படி நினைப்பது
நம் அறியாமை இறைவன் நம்
ஈன கண்களுக்கு புலப்படாதவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Nov-22, 8:35 pm)
பார்வை : 310

மேலே