பேனா

வற்றாத மை நிரப்பி
தடைகள் பல கடந்து
வளமான தமிழ் வழிய
எளியோர்க்கும் விளங்கும்படி
இலக்கண சிறை உடைத்து
உரைநடை கவிதையெனும்
புதுக்கவிதை தொடங்கியதில்
இயல் இசை நாடகமெனும்
முத்தமிழில் சரித்திரம் படைத்து
கதை கட்டுரை கடிதங்கள்
உடன்பிறப்புக்காய் பல எழுதி
குவித்த அந்த பேனா
நிமிர்த்தியதே தமிழை
கொண்டு சேர்த்ததே
தமிழ்மகனின் பெருமைகளை
உலகரங்கில்
தரணியெங்கும் விதைத்ததே
தமிழின்
தொன்மையை..
வீரத்தை...
காதலை...!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (1-Dec-22, 8:43 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : pena
பார்வை : 82

மேலே