வெண்ணிலவின் புதிய வெண்மை உன்புன்னகையின் கங்கை வெள்ளமோ

வெண்ணிலவின் கருநிழல் நின்வெண் நுதலி லாடும் கருங்குழலோ
வெண்ணிலவின் புதிய வெண்மை உன்புன்னகையின் கங்கை வெள்ளமோ
வெண்மையின் அழகை எல்லாம் அள்ளியெடுத்து எழுதிய ஓவியன்
உண்மையில் யாரடி எனக்கு மட்டும் காதில்வந்து சொல்லடி
வெண்ணில வின்கருநி ழல்நினது வெண்நுதலி
லாடும் கருங்குழலோ வெண்ணில வின்புதிய
வெண்மையின் வண்ணமது புன்னகை யின்கங்கை
வெள்ளமோ வெண்மை அழகை அனைத்தையும்
அள்ளி எடுத்து எழுதிய ஓவியன்
உண்மையில் யாரடி நீஎனக்கு மட்டுமே
காதினி லேசொல் லடி
----மேலே உள்ள விருத்தத்தை கீழே பல விகற்ப பஃறொடை வெண்பாவாக
அமைத்திருக்கிறேன் படிக்கும் போது எந்த வித்தியாசமும் தெரியாது
கவிதையின் அழகும் பொருளும் மட்டுமே தெரியும்
இலக்கண முறையில் பார்க்கும் போதே கவிதையின் இருவேறு இலக்கண
அமைப்புகள் தெரியும்
இலக்கணம் சாரா வரிகளிலும் கவிதையை இனிமையாக எழுதிட முடியும்