564 பெண்ணும் பொன்னும்போற் கடவுளைப் பேணாதது என்னே - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 22

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

மாதரை விழைந்தோன் என்றும்
..மாதரை நினைப்பன் பொன்மீ
தாதர முளோனப் பொன்னை
..அனுதின மோர்வன் ஈசன்
பாதமீ தன்பு ளேமற்
..பகலிர வினுமோ வாது
நாதனை யுன்னேங் கொன்னே
..நாள்கழித் திடலென் னெஞ்சே. 22

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

மனமே! கற்புநிறை பெண்ணை விரும்புவோன், கனவிலும் நனவிலும் அப்பெண்ணையே விருமபுவன்,. மின்னும் விளக்கமிக்க பொன்னை விரும்புவோன், நாடொறும் அப்பொன்னையே விரும்பி எண்ணுவன்.

அவைபோல், ஆண்டவன் திருவடியில் உண்மையான அன்புள்ளோமானால், எல்லையும் எல்லியும் வீணாகப் பயனின் முயற்சியில் ஈடுபட்டு நாட்போக்குதல் எதன்பொருட்டு?

மாதர் - அழகிய பெண்கள். விழைவு - விருப்பம். ஆதரம் - விருப்பம். அனுதினம் - நாடொறும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Dec-22, 3:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

சிறந்த கட்டுரைகள்

மேலே