அவள் ஒரு முடிவில்லா பயணம் -6

பாரதியும் பூங்கொடியும் இருவரும் சேர்ந்து சமைக்கின்றனர் சமையல் வாசம் மனதை பறிக்கின்றது பண்ணையார் எனக்கு பசிக்கிறது சீக்கிரம் சமையல் ரெடியா வாசம் தாங்க முடியவில்லை என்ன மாப்பிள்ளை நான் சொல்வது சரிதானே உங்களுக்கும் தானே பசிக்கிறது என கதிரிடம் கேட்க தலையை மட்டும் ஆட்டுகிறன் ஆமாம் என பாரதி இருங்கள் அப்பா ரெடியாகிக் கொண்டே இருக்கிறது எடுத்துக் கொண்டு வருகிறேன் ஏன் இவ்வளவு அவசரம் உங்களுக்கு என கேட்கிறாள் இல்லை அம்மா உன் அம்மாவின் கையில் சாப்பிட்டு என்னால் முடியவில்லை அதனால் நீ சமைப்பது வாசம் என் பசியை தூண்டுகிறது அதனால் தான் நான் கேட்கிறேன் பாரதி என சொல்ல ஆமாம் நான் உங்களுக்கு சமைத்து போட்டு தான் நீங்கள் சாப்பிட்டு பண்ணையாறா இல்லை எப்படி இருக்கிறீர்கள் என்று என் வாயில் சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன் பூங்கொடி சொல்கிறார் என்ன பூங்கொடி மாப்பிள பொண்ணுன்னு தைரியத்துல நீ பேசுற வா வா நீ ஊருக்கு உனக்கு இருக்கு என பண்ணையார் சொல்கிறார் பார்த்துக் கொள்ளலாம் என்ன செய்யப் போகிறீர்கள் என பூங்கொடி சொல்கிறாள் ரெடிப்பா சமையல் என பாரதி சமையலை எடுத்துக்கொண்டு வந்து கதிருக்கும் பண்ணையாருக்கும் பரிமாறுகிறாள் அம்மா நீயும் உட்காரு என சொல்கிறாள் இல்லை அவர்கள் சாப்பிடட்டும் நான் அப்புறம் உன்னோடு சாப்பிடுகிறேன் எனப் பூங்கொடி சொல்கிறாள். சரி அப்ப அப்ப நீங்க போய் கை கழுவிட்டு வாங்க நீ போட்ட நான் சாப்பிடுவது மட்டும்தான் சரியா என பண்ணையார் சொல்கிறார் சரிப்பா என கதிரும் பண்ணையாரும் சேர்ந்து சாப்பிடுகின்றனர் உனக்கு சமைக்க தெரியும் என்பது எனக்கே தெரியாது பாரதி என பண்ணையார் சொல்கிறார் அப்பா அங்கு அம்மாவே தானே சமைப்பாங்க எல்லாம் கத்துகிறது தான் பா நான் கத்துக்கிட்டேன் அம்மா பண்றத பார்த்து பார்த்து எனக்கு தெரியும் அதனால தானே தவிர புதுசா எல்லாம் நான் ஒன்னும் செய்யலப்பா ஆனாலும் உன் கையில ஏதோ ஒரு சக்தி இருக்குமா அதுதான் சமையல் இவ்வளவு சூப்பரா இருக்கு மாப்ள கொடுத்து வைத்தவர் தினமும் என் பொண்ணு கையால நீங்க சாப்பிடுறது எவ்வளவு அற்புதமான சமையல் உங்களுக்கு கிடைக்கிறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு மாப்பிள்ளை என பண்ணையார் சொல்கிறார் அதற்கு கதிர் நான் அவர்கிட்ட பேசினா தானே அவகிட்ட இதுவரைக்கும் நான் வாயைத் திறந்து சமையல் நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை கூட நான் சொன்னது இல்ல மாமா என தன் மனதுக்குள்ளயே புலம்புகிறான் ஆனாலும் அவள் எனக்கு சமைத்து மூணு வேலையும் கொடுக்கிறாள் அதை நான் வயிறார சாப்பிடுகிறேன் உண்மையாலுமே மாமா சமையல் மிகவும் அற்புதமானதாக தான் இருக்கும் என கதிர் தன் மனதுக்குள்ளையே நினைக்கிறான் என்ன மாப்ள எதுவும் சொல்ல மாட்டேங்கறீங்க. மாப்பிள்ளை என பண்ணையார் கேட்க தலையை மட்டும் ஆட்டுகிறான் சும்மா இருக்க அவரை தொல்லை பண்ணாதீங்க என பூங்கொடி சொல்கிறாள் ஐயோ நான் உன் மாப்பிள்ளையை ஒன்னும் பண்ணலாமா நீங்க சாப்பிடுங்க மாப்பிள்ளை என பண்ணையாரும் கதிரும் இருவரும் சேர்ந்து சாப்பிடுகின்றன சாப்பிட்டு முடித்த பின் கதிரை வாருங்கள் அப்படியே போய் உட்கார்ந்து வெளியே பேசிட்டு வரலாம் இல்ல எனக்கு ஒரு மாதிரியா இருக்கு நான் போய் படுக்கணும் மாமா என இரண்டு வார்த்தை மட்டும் கதிர் பேச உடனே பூங்கொடி ஆமாம் அவர் வேலைக்கு போயிட்டு வந்திருப்பார் அவரை சும்மா தொந்தரவு பண்ணாதீங்க அவர் போய் படுத்து ரெஸ்ட் எடுத்தா தானே திரும்ப காலையில அவர் வேலைக்கு போகணும் மாப்பிள்ளை என பூங்கொடி சொல்கிறாள் நானும் நீங்களும் படுத்துக்கலாம் என பண்ணையார் சொல்ல எங்க வந்து என்ன பண்றீங்க போங்க போய் படுத்து தூங்குங்க இந்த பக்கம் என பூங்கொடி சொல்ல கொஞ்ச நேரம் காத்து வாங்கிட்டு வரேன் என பண்ணையார் வெளியே போகிறார் பூங்கொடி பாரதியிடம் எப்படி பாரதி இருக்க வந்த பிறகு உங்க அப்பா தான் உன்கிட்ட பேசிட்டு இருக்காரு அது மட்டும் இல்லாம அவர் முன்னாடி கேட்டா எப்படி என்று தான் அவர் முன்னாடி எதுவுமே கேட்கல மாப்ள உன்ன நல்லா பாத்துக்குறாரா மாப்பிள்ளையை பார்த்தால் ரொம்ப தங்கமா இருக்காரு நீ ரொம்ப சந்தோசமா இருக்கியா யாரு என்னனு கூட நான் உங்க அப்பா சொன்னார் என்று கல்யாணம் பண்ணி கொடுத்துட்டேன் ஒரு நம்பிக்கைல ஏன்னா நீ எப்படி இருக்க என உன் வாயில சொன்னாதான் என் மனசு நிம்மதியா இருக்கும் என பூங்கொடி கேட்க அம்மா உனக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா என பாரதி கேட்க ஏண்டி இவ பட்டிக்காட்டில் இருக்கிறவள் இவருக்கு என்ன தெரியப்போகுது இவை ஏதோ எது சொன்னாலும் சரி என்று தலையை ஆட்டிட்டு போறதுக்கு மட்டும்தான் இவ என்று நினைக்கிறாயா? என் பொண்ணு வாழ்க்கை நீ நல்லா இருக்கணும் பாரதி மாப்பிள்ளையும் நீயும் சந்தோஷமா இருக்கணும் சரியா அது ஒன்னு தான் எனக்கு அதனாலதான் உங்க அப்பா சொல்லவும் நான் சரின்னு சொல்லி உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் சொல்லு பாரதி நீயும் மாப்பிள்ளையும் சந்தோசமா தானே இருக்கீங்க ஒன்னும் பிரச்சனை இல்லம்மா அவர் என்னை நல்லா பார்த்துக்கிறார் எதுவுமே அவர் வாயைத் திறந்து கூட ஒரு வார்த்தை பேசுவதில்லை இதுவரைக்கும் ஒரு சண்டை கூட போட்டதில்லை அம்மா அவர் என்ன பாத்துக்கிறாரு நீங்களே பார்த்தீங்க தானே ஏதாச்சும் அவர் என்ன பார்த்து திட்டறது முறைக்கிறது பேசுவது என்று ஏதாவது இருக்கா எதுவுமே இல்ல தானே அதனால எனக்கு அவர புடிச்சி இருக்குமா எந்த பிரச்சனையும் இல்ல நீ என்ன பத்தி எதுவும் நினைக்காதே நீயும் அப்பாவும் சந்தோஷமா அங்க இருங்க நான் இங்க நிம்மதியா தான் இருக்கேன் சரியா என பாரதி சொல்ல இப்பதாண்டி எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு சரியா ரொம்ப சந்தோஷம் பாரதி என பூங்கொடி சொல்கிறாள் தெரியுமா வா வந்து படு இல்ல நீ போ நீ போய் தூங்கு நானும் அப்பாவும் இங்க இருக்கு தானே இந்த ரூம்ல போய் படுத்து தூங்குகிறோம் என பாரதி இடம் பூங்கொடி சொல்கிறாள் சரிமா தூங்குங்கப்பா என பாரதி என சொல்கிறாள் இடம் எவ்வளவு அற்புதமா இருக்குன்னு பாத்துட்டு இருந்தேன் அம்மா நம்ம ஊரு விட இது நல்லாவே இருக்கும் நம்ம ஊருக்கு மட்டும் என்ன குறைச்சல் இயற்கையும் பசுமையும் நிறைந்த ஊர் இங்க எப்ப பார்த்தாலும் கொஞ்சம் எரிச்சலா தான் பா இருக்கும் சத்தமா இது கிராமம் மாதிரி எல்லாம் எதுவுமே வராதுப்பா என பாரதி சொல்கிறாள் நீ சொல்றது ரைட்டு தான் ஆனாலும் இது பட்டணம் மாதிரி நல்லா சிட்டி சூப்பரா இருக்குமா வண்டிங்க போறது வர்றது ரோட்ல லைட் எல்லாம் எரிகிறது அம்மா அப்பா காலம் மாறுகிறது தானே எல்லாமே தான் மாறும் அதுக்கு தகுந்த மாதிரி நாமும் மாறாதான் வேண்டும் என சொல்கிறாள் சரிப்பா நான் போய் தூங்குறேன் நீங்களும் தூங்குங்க அம்மா போய் படுத்துக்கிட்டாங்க என பாரதி சொல்கிறாள் சரிமா என சொல்லிவிட்டு வரும் பண்ணையார் பூங்கொடி பூங்கொடி என ஏன் கூப்பிட்டு கொண்டு வரீங்க என பூங்கொடி கேட்கிறாள் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல நம்ம பாரதி பத்தியா எப்படி எல்லாம் பேச கத்துக்கிட்ட ஆமா அவன் இன்னும் சின்ன புள்ள அவளுக்கு கல்யாணமே பண்ணி வச்சிட்டீங்க எப்படி பேசுற எப்படி பேசுகிறான் நான் தான் நீங்க சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டுவதற்கு பாரதி ஒன்னும் பூங்கொடி இல்லையே என பூங்கொடி சொல்லவும் ஆனால் பூங்கொடி நீ இன்னைக்கு ஒரு தினுச தான் பேசிட்டு இருக்க இருக்கட்டும் பரவாயில்லை சந்தோசம் என பண்ணையார் சொல்கிறார் படுத்து தூங்குங்க அப்பதான் நம்ம சீக்கிரமா எந்திரிச்சு விடிய காலையிலேயே ஊருக்கு போக முடியும் என பண்ணையாரிடம் பூங்கொடி ஆமா ஆமா எனக்கு ஞாபகம் இருக்கு அப்பதான் ஊருக்கு போனா வேலையெல்லாம் பார்க்க முடியும் என பண்ணையார் சொல்கிறார் கார்த்திகாவின் வீட்டில் கார்த்திகா கதவை மூடிக்கொண்டு விடிய விடிய அழுகிறாள் ரவி நன்றாக குடித்துவிட்டு வெளியில் கிடக்கிறார் எதுவும் அவள் சொல்ல விரும்பவில்லை ஆனால் மனதுக்குள்ளே வைத்திருக்கவும் முடியவில்லை நாளைக்காவது ஏதாவது வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் சப்போர்ட் பண்ணா கிடைக்கும் என்று கார்த்திகாவின் மனதில் கடவுள் புண்ணியத்தில் வேலை கிடைக்குதான்னு பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டு அழுது கொண்டே இருக்கிறாள் விடிகிறது விடிந்ததும் பாரதியின் அப்பா அம்மா அதாவது பண்ணையாரும் பூங்கொடியும் பாரதி பாரதி என கூப்பிட என்னப்பா கிளம்பிட்டீங்களா அதுக்குள்ள ஆமா அம்புட்டு வேலை இருக்கு ஊர்ல எல்லாம் போய் நானும் அம்மாவும் தான் பாக்கணும் இல்லன்னா அங்க இருக்குறவங்க எல்லாம் பண்ணையார் போனாரு வரல பண்ணையார் போனாரு வரலைன்னு சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் நான் போய் என்னை ஏதும் பார்க்கணுமா நீயும் மாப்பிள்ளையும் ஒரு தாட்டி வாங்கம்மா வந்து ஒரு பத்து நாள் இருந்துட்டு வாங்க கண்டிப்பா வரேன் பா வந்துருவேன் கவலைப்படாதீங்க சரியா என பாரதி சொல்கிறாள் டி குடித்து விட்டு போங்கள் சீக்கிரம் எடுத்துட்டு வா ஊத்திட்டு கிளம்பலாம் நான் கிளம்புகிறேன் மாப்பிள்ளை அவர் தூங்கிட்டு தான் இருக்காரு எழுப்ப வேண்டாம் இல்ல இல்ல வேணாம் வேணாம் அவர் தூங்கட்டும் எதுக்கு அவர பாவம் அவர் எந்திரிச்சவாட்டி சொல்லு நாங்க கிளம்பிட்டோம் பண்ணையார் சொல்கிறார் டீ கொண்டு வந்து குடித்த உடனே பண்ணையாரும் பூங்கொடியும் ஊருக்கு கிளம்ப வேண்டும் பஸ் வந்து விடும் என இருவரும் வருகின்றனர் வந்து பஸ் ஏறி இருவரும் ஊருக்கு கிளம்பி விட்டனர் இங்கு பாரதி எழுந்து கதிருக்கு கோசம் காலை டிபன் சமையல் என எல்லாம் செய்து கொண்டு இருக்கிறாள் தூங்கி எழுந்து வருகிறான் வந்ததும் வீட்டை சுற்றி பார்க்கிறான் அதாவது மாமாவையும் அத்தையும் காணா வில்லை என யோசிக்கிறான் டீ குடிங்கள் என சொல்கிறாள் என இன்று தான் சரி என லேசான சத்தம் வருகிறது உடனே பாரதி திரும்பி பார்க்கிறாள் எதுவுமே பேசவில்லை டி யைமட்டும் எடுத்துக் கொண்டு சென்று விடுகிறான் திரும்ப குடித்துவிட்டு வருகிறான் டம்ளர் வைக்கிறான் வைத்துவிட்டு திரும்பவும் வீட்டை சுற்றி பார்க்கிறான் அதைப் பார்த்த பாரதி என் அப்பா அம்மாவ பாக்கறீங்களா அப்பாவும் அம்மாவும் விடிய காத்தாலையே கிளம்பிட்டாங்க ஊருக்குள்ள வேலை இருக்குன்னு கிளம்பி போயிட்டாங்க உங்ககிட்ட சொல்லனும்னு தான் சொன்னாங்க ஆனா நீங்க தூங்கிட்டு இருக்கீங்க அதனாலதான் நான் உங்களை எழுப்புல சரியா நீங்க ஒன்னும் கவலைப்படாமல் போய் ஆபீஸ்க்கு ரெடியா அவங்க என பாரதி சொல்கிறாள் சரி என அப்பா ஒரு வழியா நமக்கு பிரச்சனை விட்டு விட்டாது என கதிர் நினைத்துக் கொண்டு குளிக்கச் செல்கிறான் குளித்துவிட்டு வந்து சாப்பிட்டு எப்போதும் கிளம்புவது போல் வேலைக்கு கிளம்புகிறான் கார்த்திகாவும் தன் வீட்டில் எழுந்து பார்த்தால் விடிய விடிய ரவியின் அட்டூழியம் தாங்க முடியவில்லை வீடு பூராவும் பாட்டில்களாகவே கிடைக்கிறது என்னமோ பண்ணி தொலையட்டும் என திட்டிக் கொண்டே குழந்தைக்கு பால் காய்ந்து கொடுக்கிறாள் அவள் இருக்கும் பொருளை வைத்து சமைக்கிறாள் சமைத்திட்டு கடவுளிடம் இன்னைக்காவது எனக்கு வேலை கிடைக்க வேண்டும் ஏதாவது ஒரு வழி எனக்கு காட்டு என சாமியை கும்பிட்டு குழந்தையை பக்கத்து வீட்டு பாட்டியிடமே கொடுத்துவிட்டு வருகிறாள் போதையிலே வீட்டில் படுத்து இருக்கும் ரவி வேலை தேடி திரும்பவும் ஒவ்வொரு அலுவலகமாக ஏறி ஏறி இறங்குகிறாள் யாருமே வேலை தர மாட்டார்கள் முன்ன அனுபவம் இருக்கிறதா வேறு எங்கேயாவது வேலை செய்தாயா? தெரிந்தவர்கள் யாராவது சிபாரிசு செய்தால் தருகிறோம் சம்பளம் குறைவு முன்பணம் கட்ட வேண்டும் என ஒவ்வொரு இதில் ஒவ்வொரு பிரச்சனை நேராக திரும்பவும் நாள் முழுவதும் வேலை தேடிவிட்டு பஸ் ஸ்டாண்டில் வந்து உட்காருகிறாள் மிகவும் சோர்ந்து போய் விடுகிறாள் அதேபோல் கதிரும் அந்த இடத்துக்கு வருகிறான் வீட்டுக்கு வர அவன் வருகிறான் கார்த்திகா வேலை தேடி மிகவும் சோர்ந்து போய்விட்டு இனி வாழலாமா இல்லை வேண்டாமா என யோசித்துக் கொண்டு இருக்கிறாய் கதிர் வேறு ஒரு பஸ்ஸில் ஏறி கார்த்திகாவை பார்ப்பதில்லை கார்த்திகா அவள் தனியாக வீட்டுக்கு சென்று விடுகிறார் இப்படி ஆக ஒரு இரண்டு நாள் கழித்து எதுவுமே சாப்பிடாமல் திரும்பவும் வேலை தேடி கார்த்திகா அங்கும் இங்கும் அலைக்கிறாள் அலைந்துவிட்டு நேராக பஸ் ஸ்டாண்டுக்கு வீட்டுக்கு போக வேண்டும் என வரும்போது மயக்கம் வந்து திரும்பவும் விருந்து விடுகிறாள் விழுந்து விடவும் என்ன இது என பார்க்கிறார் இக்கதிரும் அந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறான் தூரத்தில் வருவது கார்த்திகா போல் இருக்கிறது என தன் மனதுக்குள் நினைப்பதற்குள் அந்த பெண் மயங்கி கீழே விழுந்து விடுகிறார் யார் இவள் என பார்க்க வேண்டும் என ஓடி வரும்போது பக்கத்தில் வந்து பார்த்தால் கார்த்திகா என்ன கார்த்திகா போல் இருக்கிறது என்ன ஆனது இவளுக்கு என உடனே அவளை கார்த்திகா கார்த்திகா என எழுப்புகிறான். எழுந்திருக்கவில்லை ஆட்டோவை அழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என வருகிறான் வந்து மருத்துவமனையில் சேர்த்து விட்டு வெளியில் காத்திருக்கிறான் அப்பொழுது உள்ளிருந்து மருத்துவர் வெளியே வந்து எதுவும் இல்லை பசி மயக்கம் மிகவும் உடல் பலவீனமாக இருக்கிறது அதனால் தான் அவர்கள் இப்படி அடிக்கடி மயக்கம் போட்டு விடுகின்றனர் வேறு எந்த பிரச்சினையும் இல்லை என சொல்லவும் சரி ஓகே டாக்டர் என கதிர் சொல்கிறான் உள்ளே இருந்து நர்ஸ் வெளியே வருகிறார் நான் உள்ளே இருப்பவர்களை பார்க்கலாமா எனக்கு அதில் கேட்க போங்க சிறப்பை பாருங்க அவங்க என்ன ஒரு அஞ்சு நிமிஷத்துல கண்ணு முழிச்சிடுவாங்க போய் நீங்க பேசுங்க என சொல்லவும் உள்ளே வருகிறான் உள்ளே வந்து பார்த்தால் கார்த்திகா மயங்கி கிடப்பதை பார்த்து மிகவும் வருத்தப்படுகிறான் எப்படி இருந்த கார்த்திகா முதல் முதலில் அவளை பார்த்த போது நம் கண்ணுக்கு தேவதையாக தெரிந்தவள் பின் காதலியாக மாறியவள் இன்று இப்படி இருக்கிறாளே என் தேவதையே என் காதலியாக இருந்தவள் மனைவியாக வேண்டும் என நினைத்தேன் அது நடக்கவில்லை அதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை விதியின் விளையாட்டு புரியவில்லை இதுவும் கடவுளின் விளையாட்டு தான் என நினைக்கிறேன் இதற்குக் காரணம் என்ன என்று தெரியவில்லை என தன் மனதுக்குள்ளயே பேசிக் கொள்கிறான் அதற்குள் கண் முழிக்கும் கார்த்திகா கதிர் நீயா திரும்பவும் அது நான் கேக்கணும் கார்த்திகா திரும்பவும் உனக்கு என்ன பிரச்சனை நீ ஏன் அடிக்கடி இந்த மாதிரி மயக்கம் போட்டு விழுகுற அன்னைக்கு தான் இந்த மாதிரி ஆச்சு நான் தான் உன்னை கூட்டிட்டு வந்து சேர்த்துக்குறேன் அப்ப ஏதோ கொஞ்சம் ஏதோ சொல்ல சரி போ என்று நானும் விட்டுட்டேன் இப்ப நீ இந்த மாதிரி என்ன கார்த்திகா பிரச்சனை உனக்கு என கதிர் கேட்கிறான் இல்ல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல கதிர் நான் நல்லா தான் இருக்கேன் பொய் சொல்லாத என்ன பிரச்சனை என்று முதலில் சொல்லு என்கிட்ட என்ன கதிர் கேட்க அது ஒன்னும் இல்ல கதிர் என முதலில் தயங்குகிறாள் பின் பேசலாமா வேண்டாமா என யோசிக்கிறாள் தயவுசெஞ்சு பிரண்டா நினைச்சு சொல்லு என்னால முடிஞ்சா நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் எதுவும் இல்லை கதிர் தயவு செஞ்சு கேட்காதே என கார்த்திகா சொல்கிறாள் சரி நான் ஒன்னும் உன்னை கேட்கல எனக்கு பதில் சொல்ல வேண்டாம் அது இல்ல கதிர் சும்மா எனக்கு அப்பப்ப இந்த மாதிரி தான் தலை சுத்தும் வேற எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல சரி உன் அப்பா அம்மா என்னதான் ஆனாங்க உன் வீட்டுக்காரர் எங்க இருக்காரு அவர் அட்ரஸ் ஆச்சும் கொடு இல்ல அவரு போன் நம்பர் கொடு அவர் கிட்ட பேசுறேன் இப்ப வந்து அவர் உன்னை கூட்டிட்டு போக இல்ல அவர் ரொம்ப பிசி அவருக்கு போன் பண்ணாலும் அவர் எடுக்க மாட்டாரு என கார்த்திகா சொல்கிறாள் உன்ன விடவா அவருக்கு வேலை முக்கியம்மா என கதிர் கேட்கிறார் இல்ல அப்படி இல்ல கதிர் அவருக்கு தெரிந்தால் அவர் ரொம்ப பதறுவாரு நானே வீட்டுக்குப் போகிறேன் என கார்த்திகா சொல்கிறாள் ஆனாலும் ஏதோ ஒன்னு மறைக்கிற கார்த்திகா அது என்னன்னு எனக்கு தெரியல கேட்கக்கூடாது கேட்கிற உரிமையை எனக்கு இல்லைன்னு தெரியுது எனக்கு பதில் நான் கேட்டது தப்பு தான் என்னை மன்னிச்சிடு அப்படி எல்லாம் எதுவும் இல்ல கதிர் சரியா சரி நீ கொஞ்ச நேரம் கழிச்சு கிளம்பு எவ்ளோ பில்லோ அதை நான் கட்டிட்டு நான் கிளம்புறேன் என கதிர் சொல்லிவிட்டு வருகிறான் கார்த்திகா கதிர் கதிர் என கூப்பிடுகிறார் அவன் எதுவும் பேசாமல் கிளம்பி வந்து விடுகிறான் கார்த்திகா சிறிது நேரம் இருந்து விட்டு மாத்திரை கொண்டு வந்து நர்ஸ் கொடுக்கிறார்கள் இந்தாங்க மேடம் அவங்க கூட இருந்தா அந்த சார் வாங்கி கொடுத்தாரு நீங்க என் வீட்டுக்கு கிளம்பலாம் மேடம் எந்த பிரச்சனையும் இல்லை என நர்சு சொல்ல ரொம்ப தேங்க்ஸ்ங்க என கார்த்திகா வீட்டுக்கு கிளம்பி வருகிறாள் அவளால் முடியவில்லை மிகவும் உடல் பலவீனமாக இருக்கிறது வந்ததும் வீட்டுக்குள் நுழைந்ததும் என்னடி இன்னைக்கு போய் ஊர் சுத்திட்டு வந்துட்ட இன்னைக்கு எவனாச்சும் உனக்கு வேலை கொடுத்தானா எவனை பார்த்துட்டு வந்த இன்னைக்கு எவனும் குடுக்கலையா என ரவிக்கத்த நீயெல்லாம் ஒரு மனுஷன் என ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு உள்ளே போகிறாள் பக்கத்து வீட்டு பாட்டி வந்து இந்த அம்மா கார்த்திகா குழந்தை காலையிலிருந்து குழந்தை எதுவுமே சாப்பிடல எனக்கு சொல்லவும் சரி பாட்டி நான் பாத்துக்குறேன் என குழந்தையை வாங்கிக் கொண்டு மெல்ல நடந்து உள்ளே போகிறாள் பொய் குழந்தையை பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டு அவளும் படுத்து கொள்கிறாள் படுத்துக்கொண்டே யோசிக்கிறாள் எவ்வளவு நல்லவன் அவன் கிட்ட போய் நம்ம இதை மறைத்துவிட்டோமே நம்ம பிரச்சனையா அவன் கிட்ட சொல்லி இருந்தா என்ன தப்பு நமக்கு லவ் பண்றப்ப என்ன எல்லாம் பண்ணான்ம் அப்பா பண்ண ஒரு வேலையால தான் நானும் அவனும் இன்னைக்கு பிரிந்து விட்டோம் கதிர்கிட்ட சொன்னா தப்பு இல்ல நாளைக்கு கதிர்கிட்ட சொல்லணும் பஸ் ஸ்டாண்ட்ல பார்த்து என கார்த்திகா சொல்கிறாள் ஆன ஒன்னு நம்ம சொல்லி கதிர் வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை வந்துவிட்டது என்றால் நம்மளால அவனுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது அவனுக்கு இப்பதான் கல்யாணம் ஆயிருக்கு அவன் சந்தோஷமா இருக்கணும் என அதுவும் கார்த்திகா நினைக்கிறாள் சொல்லலாமா வேண்டாமா சொல்லலாமா வேண்டாமா என நினைத்துக் கொண்டிருக்கிறாள் திரும்பவும் மறுநாள் எப்படியும் அதே வேலையை செய்கிறாள் வேலை தேடி திரிகிறாள் அப்பொழுது கதிர் வருகிறான் எதிர்ப்பாராமல் இவளை பார்க்கிறான் அந்த ஒரு கம்பெனிக்குள் போய்விட்டு வருவதை பார்த்து இவன் பின்னாலே பொய் என்ன சார் இப்போ ஒருத்தவங்க வந்தாங்களே அவங்க என்ன அந்த பொண்ணா வேலை வேணும்னு கேட்டுட்டு இருக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் அந்த பொண்ணு வந்துச்சு வேலை எல்லாம் இல்லை ஆனால் திரும்பவும் வந்து எந்த வேலையா இருந்தாலும் சரி கொடுங்க கொடுங்க என்று இருந்தால் தானே கொடுக்கிறதுக்கு என அங்கு இருக்கும் ஒருத்தர் ஒரு மாதிரியாக பேசுகிறார் சரிங்க சார் என கேட்டுவிட்டு வெளியே வருகிறான் அப்ப கார்த்திகா வேலை தேடி திரியிறாலா அவளுக்கு வேலை கிடைக்கணுமா என்ன பிரச்சனைன்னு தெரியலையே எதுக்கும் அவ வேலைக்கு போகணும்னு நினைக்கிறாள் விடை எதுவும் கிடைக்கவில்லை வந்து ஆட்டோவில் ஏறி ஆபீஸ்க்கு போக வேண்டும் என வரும்போது அதே ஆட்டோவில் கார்த்திகா ஏர்வாலா இல்லை ஏறப்போவதில்லை ஏன் என்றால் அவள் வேற ஆட்டோவில் எரிச்சென்று விட்டால் ஆபீஸ்க்கு வந்தாலும் அவளைப் பற்றிய ஓட்டமே தான் ஓடுகிறது பாரதி மீது வந்த காதல் போன இடம் தெரியவில்லை கார்த்திகா மீது வந்த காதல் இல்லை ஆனால் கார்த்திகாவுக்கு என்ன பிரச்சனை எதற்காக அவளை நாம் தினமும் சந்திக்கிறோம் என்னவென்று புரியவில்லை கேட்டாலும் அவள் சொல்வதில்லையே என யோசிக்கிறான் கார்த்திகாவை பற்றி யோசிக்கிறான் யோசித்துக் கொண்டே தன் வேலையை செய்கிறான் எந்த வேலையும் அவனுக்கு ஓடவில்லை பாதினால் விடுமுறை விடுமுறை கேட்டுவிட்டு வீட்டுக்கு வருகிறான் வரும் வழியில் எப்பொழுதும் போல அதே பஸ் ஸ்டாண்டில் கார்த்திகா அழுது கொண்டு உட்கார்ந்திருக்கிறாள் அவள் அழுது கொண்டிருப்பதை பார்த்து விட்டு பக்கத்தில் பொய் கார்த்திகா என கூப்பிடுகிறான் அதற்கு கார்த்திக உடனே கண்ணை துடைத்துக் கொண்டு சொல்லு கதிர் என்ன நீ இந்நேரத்துக்கு சாயந்தரம் தானே வீட்டுக்கு போக எனக் கேட்கிறார் இல்லை ஒரு மாதிரியா இருந்துச்சு மனசு அதனாலதான் வீட்டுக்கு போலாம்னு வந்தேன் என பதில் சொல்கிறான் நீ என்ன சும்மா நானும் வீட்டுக்கு தான் போகணும் இன்னும் பஸ் வரல அதனால தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் சும்மா பொய் சொல்லாத கார்த்திகா ஏதோ வாய்க்கு வந்தது ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு தானே என்ன உனக்கு பிரச்சனை என்று சொல்லு கார்த்திகா என கேட்கிறான் கேட்கிறான் ஆனால் எனக்கு வேலை எதுவும் கிடைக்க மாட்டேங்குது என சுருக்கமாக அதை மட்டும் சொல்கிறாள் அதை கேட்ட கதிர் வேலையா நீ என்கிட்ட சொல்லி இருந்தா நான் உனக்கு கண்டிப்பா வாங்கி கொடுத்திருப்பேன் தானே நான் உனக்கு வாங்கி தரேன் என சொல்கிறான் இல்ல இல்ல வேண்டாம் எனக்கு வேண்டாம் உனக்கு எதுக்கு கஷ்டம் என கார்த்திகா சொல்கிறான் இது ஒரு கஷ்டமா இல்ல இல்ல கண்டிப்பா நான் வாங்கி தரேன் கார்த்திகா நாளைக்கு இதே டைமுக்கு உனக்கு வேலை கிடைத்துவிடும் நீ கவலைப்படாத என பதில் சொல்கிறான் இல்லை எனக்கு தயவு செஞ்சு சொல்றேன் கதிர் எனக்கு வேணாம் நானே பாத்துக்கிறேன் ப்ளீஸ் இந்த ஒரு ஹெல்ப் செய்ய எனக்கு பண்றதுக்கு வாய்ப்பு கொடுக்கா கார்த்திகா சொல்லிவிட்டு சரி நான் வீட்டுக்கு கிளம்புறேன் என அவள் போகும் பஸ் வந்து விட்டது அதில் ஏறி கிளம்புகிறாள் உடனே கதிர் வீட்டுக்கு போவதை விட்டுவிட்டு தனக்குத் தெரிந்த நண்பனின் கம்பெனிக்கு செல்கிறான் அங்கு தான் நண்பனை பார்க்கிறார் அரவிந்த் உள்ளே போவதற்கு முன் வெளியே இருப்பவரிடம் ஹலோ நான் அரவிந்த் சார் பாக்கணும் என கேட்க அப்பாயின்மென்ட் இருக்கா உங்ககிட்ட என்ன வெளியில் இருப்பவர் கேட்கிறார் என்று கதிர் என சொல்லுங்கள் அவருக்கு தெரியும் என பதில் சொல்கிறான் சரி இருங்க வெயிட் பண்ணுங்க நான் போய் சார் கிட்ட கேட்டு வரேன் மேனேஜர் உள்ளே போய் உங்க பிரண்டு கதிர்ந்து வந்திருக்காரு உள்ள வர சொல்றாங்க சார் உங்களை அரவிந்த் சார் வர சொல்றாரு உள்ள போங்க என மேனேஜர் சொல்கிறார் சரிங்க சார் என கதிர் உள்ளே வருகிறான் வந்ததும் கதிர் எப்படி இருக்க ரொம்ப நாள் ஆகுதுடா உன்னை பார்த்து காலேஜ்ல பார்த்தது அப்புறம் என்ன ஏதுன்னு கூட உனக்கு எனக்கு காண்ட்ராக்டே இல்ல எப்படி இருக்க நல்லா இருக்கியா என்ன அரவிந்த் கேட்க ஆனா நல்லா இருக்கேன் சரி இப்ப எப்படி இங்க நீங்க தானே கம்பெனி வச்சிருக்கேன் அப்ப நம்ம சந்தித்த போது சொன்னது அதனால தான் உன்ன பாக்குறதுக்கு வந்தேன் சரி வா வா என்ன சாப்பிட டீ, காபி ஜூஸ் எது குடிக்கிற இல்ல எதுவும் வேணாம் மச்சி என்ன குடிக்கிற சொல்லு என அரவிந்த் கேட்கிறான் சரி ஜூஸ் குடிக்கிற என கதிர் சொல்ல ஜூஸ் கொண்டு வாங்க என்று சொல்லிவிட்டு சொல்லு மச்சி எப்படி இருக்கும் வாழ்க்கை என்ன எது என்று பேசிக்கிறான் பேசிய பின் கதிர் அரவிந்த் எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் என கேட்க சொல்லு உனக்கு இல்லாத ஹெல்ப்பா என்ன பிரச்சனை என அரவிந்த்.

தொடரும்...

எழுதியவர் : தாரா (2-Feb-23, 8:14 am)
சேர்த்தது : Thara
பார்வை : 249

மேலே