Thara - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Thara |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 10-Sep-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Apr-2021 |
பார்த்தவர்கள் | : 2798 |
புள்ளி | : 766 |
இரு இதயங்களின் ஓசை சங்கமம்
ஆகிறது
சத்தமில்லாமல் காதல் அங்கு
உருவாகிறது
நித்தமும் அவள் நினைவு
உண்டாகிறது
நிம்மதியை தொலைத்தது இங்கு
இன்பம் ஆகிறது
பார்க்கும் இடமெல்லாம் அவன் முகம்
தெரிகிறது
மனம் அவனை ரசிக்கிறது
மௌனமாய் சிரிக்கிறது
இருமனம் இணைகிறது
காதல் அங்கு தெரிகிறது
காதலே உன்னை பிடிக்கிறது
முதல் பார்வையில் உன்னை ரசிக்க
முகமூடியில் உன் முகம் நீ மறைக்க
பெண்ணே நீ யார் என்று என் இதயம்
நினைக்க
பேரின்பத்தில் நான் மிதக்க
பிரியமாய் நான் உன்னை ரசிக்க
புரியாமல் நீ இருக்க
உன் பின்னால் நான் நடக்க
உன் மனதில் நான் இருக்க
மௌனமாய் நீ சிரிக்க
காதல் என அதை நான் நினைக்க
தியாகத்தின் கொடி பறக்கிறது
தலைவர்களின் வீரம் தெரிகிறது
நம் நாட்டின் வளம் புரிகிறது
பாரதத் தாயின் கருணை
நம் நாட்டில் இல்லை வறுமை
எல்லாமே இங்கு செழுமை
இயற்கையின் வளம் அருமை
இந்தியா என்பது இனிமை
ஒற்றுமை என்பது உண்மை
இதுவே இந்திய நாட்டின் பெருமை
போகித் திருநாள்
தித்திக்கும் பொங்கல் திருநாள்
அழகான கண்ணனுக்கு ஒரு நாள் அசைபோடும் மாட்டுக்கு திருநாள் அழகான பயிரை தரும் ஆகாய தலைவனுக்கு பெருநாள்
அதிகாலை உதயமாகும் கதிரவனின் திருநாள்
அழகான பொங்கல் திருநாள்
அச்சு வெல்லம் பச்சரிசி சுவை நாள்
புதுப்பானை பொங்கும் திருநாள் உழவனின் பெருநாள்
உழைக்கும் கரங்களின் திருநாள் தமிழரின் திருநாள்
தரணியெங்கும் பெருநாள்
இனிக்கும் கரும்பு சுவையினால் மஞ்சளின் மணநாள்
மங்கலம் பொங்கும் திருநாள்
உறவுகள் கூடும் திருநாள்
பொங்கும் பொங்கல் திருநாள்
தை மகளின் பெருநாள்
தமிழ் மகளின் திருநாள்
அணை இல்லா நெஞ்சம்
அலை பாயும் உன் நினைவு கொஞ்சம்
நாம் பழகிய காலம் மனதோடு போகும்
உன் தோள் சாய்ந்த நேரம் மனதுக்கு
இனிமையாகும்
இரவில் உன் முகம் இதயத்தில் ஓடும்
இனிய கனவுகள் எனக்குள்ளே வாழும்
இதயத்தை தொட்டு பறித்து போகும்
பல ஜென்மம் சேர்ந்து வாழ கடவுளை
வேண்டும்
காலம் கடந்தாலும் நம் காதல் வாழும்
காதல் கவிதையே நீ என்
வாழ்க்கை ஆகும்
காதல்தீவில் நான் தொலையா
வில்லை
அவள் காலடி படும் மணலாக மாற
நினைக்கிறேன்
காற்றில் மிதந்து வரும்
இன்னிசையில் அவளை
நேசிக்கிறேன்
அதன் வரிகளை நான் மௌணமாக
ரசிக்கிறேன்
ஒரு திசையில் நீ இருக்கிறாய்
மாறு திசையில் நான் இருக்கிறேன்
இடையில் காதல் செல்கிறதே
அழகாக
உன் நிழல்லை கையில் பிடிக்க
நினைக்கிறேன் அது முடியவில்லை
எதிர்காலம் என்னை கடந்து
போகிறாதே
அழகாக அவள் வந்தாள் அன்பை
எனக்கு தந்தால் நிலவின் ஒளியில்
நடந்து சென்றோம்
விதையாய் விழுந்த
நீ விருட்சமாய் வளர்ந்து
திரைகடலின் வெள்ளிமலரின்
வெள்ளைபூக்களையாய் வெளிவந்த
சின்ன கலைவண்ணர் சிரிப்பின்
சிந்தனையாய் மண்ணின் மைந்தன்
பசுமை நாயகன் மறைந்தும் மலர்ந்து
கொண்டே வாழ்வர்