Thara - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Thara |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 10-Sep-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Apr-2021 |
பார்த்தவர்கள் | : 2467 |
புள்ளி | : 553 |
இரவுக்கு அழகாக அழகே நிலவாக
உன்னை ரசிக்கும் என் விழியாக
உணவு பரிமாறும் இடம்
வெட்டவெளியாக
நிலாச்சோறு உண்பது மனம் நிறைவாக
நித்தமும் நீ அழகாக
நிம்மதி தரும் இரவாக
கனவுகளின் கற்பனையாக
நினைவுகளின் தேடலாகா
நிலவே அழகாக
அழகே நிலவாக
நாடு விடுதலை பெற்று இருக்க
நாட்டுமக்கள் நிலை மாறி இருக்க
பல தலைவர்கள் உயிர் தியாகம்
செய்து இருக்க
காந்தியின் அகிம்சை வழியில்
நடந்து இருக்க
பல தடைகளை கடந்து இருக்க
ஒற்றுமையாய் நின்று இருக்க
ஆணும் பெண்ணும் போராடி இருக்க
அடிமை முறையை மாற்றி இருக்க
சுதந்திரம் நாடு அடைந்து இருக்க
முன்னேற்றம் நாடு அடைந்து இருக்க
அழகான இரவுக்கு இனிமை நீ
பல இதயத்திற்கு கற்பனை காதல்
கவிஞர்களின் தேடல் காகிதத்தின்
கீறால்
எண்ணத்தின் மோதல் மறைமுக
காதல்
உன்னை தேடும் என் ஆவல்
வெள்ளி நிலவே நீ சிரிக்க
தொலைதூரத்தில் நான் நின்று
இருக்க
மாலை நேரத்தில் நீ மலர்ந்து
மௌனமாய் என்னை நீ கவர்ந்து
மனதிற்கு உள்ளே அழகாய் நுழைந்து
உன் அழகை கண்டு வியந்து
காதல் வளர்த்த என் மனது
பாலைவனமான வாழ்வில்
பாதம் பதித்தவள்
பசுமையாய் மாற்றியவள்
பக்குவமாய் நான் இருக்க
காதலெனும் செடியை நீ வளர்க்க
காத்திருந்த நாட்கள் நான் ரசிக்க
பொக்கிஷமாய் நீ கிடைக்க
பூப்போல் நீ சிரிக்க
அடியோடு என்னை சாய்த்து இருக்க
ஆசை காதலனாய் நான் இருக்க
அணை இல்லா நெஞ்சம்
அலை பாயும் உன் நினைவு கொஞ்சம்
நாம் பழகிய காலம் மனதோடு போகும்
உன் தோள் சாய்ந்த நேரம் மனதுக்கு
இனிமையாகும்
இரவில் உன் முகம் இதயத்தில் ஓடும்
இனிய கனவுகள் எனக்குள்ளே வாழும்
இதயத்தை தொட்டு பறித்து போகும்
பல ஜென்மம் சேர்ந்து வாழ கடவுளை
வேண்டும்
காலம் கடந்தாலும் நம் காதல் வாழும்
காதல் கவிதையே நீ என்
வாழ்க்கை ஆகும்
காதல்தீவில் நான் தொலையா
வில்லை
அவள் காலடி படும் மணலாக மாற
நினைக்கிறேன்
காற்றில் மிதந்து வரும்
இன்னிசையில் அவளை
நேசிக்கிறேன்
அதன் வரிகளை நான் மௌணமாக
ரசிக்கிறேன்
ஒரு திசையில் நீ இருக்கிறாய்
மாறு திசையில் நான் இருக்கிறேன்
இடையில் காதல் செல்கிறதே
அழகாக
உன் நிழல்லை கையில் பிடிக்க
நினைக்கிறேன் அது முடியவில்லை
எதிர்காலம் என்னை கடந்து
போகிறாதே
அழகாக அவள் வந்தாள் அன்பை
எனக்கு தந்தால் நிலவின் ஒளியில்
நடந்து சென்றோம்
விதையாய் விழுந்த
நீ விருட்சமாய் வளர்ந்து
திரைகடலின் வெள்ளிமலரின்
வெள்ளைபூக்களையாய் வெளிவந்த
சின்ன கலைவண்ணர் சிரிப்பின்
சிந்தனையாய் மண்ணின் மைந்தன்
பசுமை நாயகன் மறைந்தும் மலர்ந்து
கொண்டே வாழ்வர்