#தாய்மை..//

#நீர்குடம் உடையுதடி
தலை தெரியுதடி..//
#காணாத வலியை
அனுபவிக்கிறது யாக்கை..//
#ஈரைந்து திங்கள்
பட்ட கஷ்டமெல்லாம்..//
#கண்ணெதிரே தெரியுதே
ஆனந்தம் கொள்ளுதே..//
#மலடியை முறித்து
தாய்மை கொடுத்தவளே..//
#மார்போடு அணைக்கிறேன்
மகளே உன்னை..//
#கொங்கையில் பால்
கட்டிக்கொள்ளும் என..//
#வயிறு நிரப்பி
என்னுடல் காத்தவளே..//
#ஆனந்தத்தை எப்படிடி
வெளியே செல்வேன்..//
#இறகைப்போலே சிறகாக
பறக்கிறேன் நான்..//

எழுதியவர் : (3-Apr-23, 9:06 am)
பார்வை : 99

மேலே