நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே
நெஞ்சமெலாம் நிறைந்தவளே!!
............
நெஞ்சமெல்லாம்
நிறைந்தவளே
நேசத்தில் இணைந்தவளே /
தஞ்சமென
சரணடைந்தேன்
தாயெனவே காத்திடுக /
பலகோடி
பெண்களிலே
பாவையுனைப் பார்த்ததுமே /
சிலநொடியும்
தயங்காது சிக்கெனவே கரம்பிடித்தேன் /
செப்போடு
தங்கமதைச் சேர்த்தால்தான் அணிகலன்கள் /
தப்பேதும்
இல்லாத
தாரகைநீ தனித்துவமே /
உடற்பசிக்கு
அப்பாலே
உளப்பசிக்காய் வந்தவளே /
மடலேறும்
முன்னாலே
மணமுடிக்க இசைந்தாயே /
இதயங்கள்
வென்றாலே
இருமனமும் ஒன்றாகும்/
பதமாகும்
வாழ்க்கைப்
பார்வியந்து போற்றிடவே !!
-யாதுமறியான்.