விரல்களால் என்னைநீ ஸ்பரிசித்தால்

விரல்கள் மீட்டினால் வீணையில்
ஆனந்த ராகம்
விரல்கள் தொட்டால் தோட்டத்தில்
மலர்களுக்கு புதுவசந்தம்
விரல்கள் நீவினால் நீலநிறக்
கூந்தலுக்குக் கொண்டாட்டம்
விரல்களால் என்னைநீ ஸ்பரிசித்தால்
என்கவிதைக்கு புதுஉற்சாகம்

எழுதியவர் : கவின் சாரலன் (7-May-23, 10:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 76

மேலே