காணவில்லை அவளை
காணவில்லை அவளை!!
💗💗💗💗💗💗💗💗💗💗
அது ஓர் அமாவாசை இரவு !
மென்னொளி வீசும் -
என்
வெண்ணிலாவைக் காணவில்லை !
புள்ளிகளாய்க் கண்சிமிட்டும்
விண்மீன்கள் மீது -
மனம்
வெறுப்புமிழ்கிறது!
காரிருள் பொழியும்
வானத்தினூடே
புவியெல்லைத்
தாண்டியும்
தேடித் தொலைகிறேன்!
தலையில் முட்டுவதும்
காலில் தட்டுப்படுவதும்
நிழல் மறைத்த
நிலவென்பதை அறியாமலேயே !
-யாதுமறியான்.

