குலோத்துங்க சோழன் கோவை - நூல் - இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.

அஃதாவது-தெய்வத்தானாவது தலைவியானாவது கூடுதல்; அவற்றுளிது தலைவியாற் கூடுதலென்க.

அது: வேட்கையுணர்த்தல், மறுத்தல், உடன்படல், கூட்டமென நான்கு வகைப்படும்;

அந்நான்கும்- இரந்த பின்னிற்றற் கெண்ணல் முதலிய பதினைந்தும் பிறவுமாகிய விரிகளையுடையன; அவை வருமாறு:

இரந்துபின் னிற்றல்.

(இ-ள்.) அங்ஙனமெண்ணிய தலைவன் தலைவிக்கு இதஞ்சொல்லிப் பின்னே நிற்றல்.

கட்டளைக் கலித்துறை

உள்ளக் கமலத்தி னுள்ளூ றியவென் னுவகையென்னும்
வெள்ளத் தடத்தை விடாவன்ன மேவியன் பாவனைத்துந்
தெள்ளத் தெளிந்த குலோத்துங்கன் கோழிச் சிலம்பின்மதன்
கள்ளச் சலத்தையென் பாலினு நீக்கக் கருதுமின்றே! 6

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (21-Dec-23, 7:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே