நீதிமன்றத் தீர்ப்புகள்

நீதிமன்றத் தீர்ப்புகள்
*********
இயம்பிய தீர்ப்பு இறைவனது என்றே
இயங்கும் மனதில்நீ யெண்ணு! (குறள் வெண்பா)


இயம்பிய தீர்ப்பு, இறைவனது என்றே,
இயங்கிடும் நெஞ்சுள் இருக்க -- துயரமதும்
தேங்காது, சென்மங்கள் சேர்ந்தாலும் ; நீதியதும்,
ஓங்கி விளங்குமாம் ஓர்ந்து !
********* ( இரு விகற்ப நேரிசை வெண்பா)

எழுதியவர் : சக்கரைவாசன் (22-Dec-23, 10:03 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 42

மேலே