புது வருடம்…

புது வருடம்…..!

விடியலில் மாற்றமில்லை
பறவைகளின்
உற்சாக கூச்சல்
வழக்கம் போல

நேற்று இரவு
கூட வனங்கள்
அமைதியாகத்தான்
இருந்தது

மரங்களின்
அசைவுகளும்
மூங்கில்களின்
உரசல்களும்
வித்தியாசம் ஒன்றுமில்லை

மனித கூட்டங்கள்
வசிக்கும் பகுதிகள்
மட்டும் ஏனோ
இரவு முழுவதும்
ஏன் விடிந்த பின்பும்
கூக்குரலாய்..!
புது வருடம்
பிறந்திருக்கிறதாம்

காலம் வழக்கம் போல்
நமுட்டு சிரிப்புடன்
நகர்ந்து கொண்டேதான்
இருக்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (1-Jan-24, 11:58 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 68

மேலே